Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தோல் பை

தோல் பை

திராட்சமதுவை நிரப்பி வைப்பதற்காக, வெள்ளாடு, செம்மறியாடு போன்ற விலங்குகளின் முழு தோலால் செய்யப்பட்ட பை. திராட்சமது புளிக்கும்போது, அதிலிருந்து கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உருவாவதால், தோல் பைகளில் அழுத்தம் ஏற்படும். அதனால், புதிய தோல் பைகளில்தான் திராட்சமது நிரப்பப்பட்டது. புதிய தோல் பைகள் விரிவடைந்தன; ஆனால், பழைய தோல் பைகள் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்தன.—யோசு 9:4; மத் 9:17.