அற்புத படைப்புகள் ஆஹா!
1. பொன் வானில் சூரியனின் ஒளி வெள்ளம்.
வான்வீதியில் நட்சத்ரங்கள் மனதை அள்ளும்.
புல்லின்மேல் வைரம்போல் பனி மின்னும்.
தென்றல் காற்று காதோடு மெதுவாய் பாடும்.
(பல்லவிக்கு முன்)
யெகோவா தேவா, படைப்பைக் கண்டு
வியந்து நின்றேன். நாள் முழுதும் நான் ரசிக்கிறேன்.
உம் அன்பையே நான் ஸ்வாசிக்கிறேன்!
(பல்லவி)
அழகோவியம் எங்கும் பார்க்கிறேன்!
மெல்லிசையோடு உம்மை பாடுவேன்!
நான் பாடுவேன்!
2. இத்தனை கோடி ஜீவன்கள் இங்கே!
என்ன சொல்லி பேசுதோ, மௌன மொழியாலே?
கேட்கின்றதா ஆழ்கடலின் ஓசை?
ஜீவன்கள் எல்லாமே புகழ் பாடுதே!
(பல்லவிக்கு முன்)
யெகோவா தேவா, படைப்பைக் கண்டு
வியந்து நின்றேன். நாள் முழுதும் நான் ரசிக்கிறேன்.
உம் அன்பையே நான் ஸ்வாசிக்கிறேன்!
(பல்லவி)
அழகோவியம் எங்கும் பார்க்கிறேன்!
மெல்லிசையோடு உம்மை பாடுவேன்!
நான் பாடுவேன்!
(பிரிட்ஜ்)
விண்ணிலே ஓவியம் நீர் வரைந்தீர்!
என்னைச் சுற்றிலும் இறைவா உங்கள் கைவண்ணமே!
(பல்லவிக்கு முன்)
யெகோவா தேவா, படைப்பைக் கண்டு
வியந்து நின்றேன். நாள் முழுதும் நான் ரசிக்கிறேன்.
உம் அன்பையே நான் ஸ்வாசிக்கிறேன்!
(பல்லவி)
அழகோவியம் எங்கும் பார்க்கிறேன்!
மெல்லிசையோடு உம்மை பாடுவேன்!
அழகோவியம் எங்கும் நான் பார்க்கிறேன்!
மெல்லிசையோடு உம்மை நான் பாடுவேன்!
மெல்லிசையோடு உம்மை நான் பாடுவேன்!
நான் பாடுவேன்!