யெகோவா என்றும் நம் பக்கம்
டவுன்லோட்:
லீட்ஷீட்
1. கலங்கிடும் நேரத்தில்,
தனிமைகள் சுடும் வேளையில்,
அடைக்கலம் நான் தேடினேன்,
கண் திறந்து பார்க்கிறேன்.
வான் ரதம் எனை சூழ்ந்திடும்,
நாளும் என்னைக் காத்திடும்,
கோட்டை என் தேவனே!
(பல்லவி)
அவர் தந்தார்,
தைர்யம் எனது நெஞ்சத்தில்,
தைர்யம் என் ஆழ் மௌனத்தில்,
தைர்யம் பயம் சூழ்கையில்,
தைர்யம் என் பார்வையில்,
தைர்யம் என் பாதையில்,
தைர்யம் என் தேவன் வார்த்தையில்,
எனதருகில் யெகோவா,
என் மேய்ப்பராய்
முன் செல்கிறார்.
என் பாதை உண்மை தான்.
என் தந்தையாய்
எனைத் தாங்குவார்.
என் த்யாகம் ந்யாயம் தான்.
2. வெகு தூரமாய்
பறந்தோடிப் போனாலும்
நீ தேன் சிட்டே.
நீ கலங்காதே
தனிமையில் விட மாட்டாரே,
உன் ஜீவன் காப்பாரே!
(பல்லவி)
தருவாரே
தைர்யம் உனது நெஞ்சத்தில்,
தைர்யம் உன் ஆழ் மௌனத்தில்,
தைர்யம் பயம் சூழ்கையில்,
தைர்யம் உன் பார்வையில்,
தைர்யம் உன் பாதையில்,
தைர்யம் நம் தேவன் வார்த்தையில்,
நமதருகில் யெகோவா
வாழ்நாள் எல்லாம்.
நமதருகில் யெகோவா!
நம் மேய்ப்பராகவே
முன் செல்கிறார்.
நம் பாதை உண்மை தான்.
நமதருகில் யெகோவா!
நம் தந்தையாய்
நமைத் தாங்குவார்.
நம் த்யாகம் ந்யாயம் தான்.
(பல்லவி)
தந்தாரே
தைர்யம் எனது நெஞ்சத்தில்,
தைர்யம் என் ஆழ் மௌனத்தில்,
தைர்யம் பயம் சூழ்கையில்,
தைர்யம் என் பார்வையில்,
தைர்யம் என் பாதையில்,
தைர்யம் என் தேவன் வார்த்தையில்,
நமதருகில் யெகோவா
வாழ்நாள் எல்லாம்.
நமதருகில் யெகோவா
வாழ்நாள் எல்லாம்.
நமதருகில் யெகோவா!