Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புத்தம் புது பூமி வருமே!

புத்தம் புது பூமி வருமே!

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. மனக் கண்ணில் பார் என் செல்லக் கண்ணே,

    வரும் பூஞ்சோலையில் துள்ளி ஓடிடும்,

    ஒரு புள்ளி மான் நீ

    அழகான புத்தம் புது பூமி,

    பயங்கள் இல்லை உன் பாதையில்தான்,

    எங்கும் தேவன் சொல்லைக் கேட்கும் ஜனங்கள்,

    நிலவின் காலத்தைப் போல்,

    நிம்மதி மண்ணில் இனி என்றும்தான்,

    தேவன் பாசத்தால், மகனின் விண் ராஜ்யத்தில்,

    வரும் பூஞ்சோலைதான்.

    (பல்லவி)

    உன் நம்பிக்கை கண் முன்னே

    சிங்கம் போல் பாய்ந்து நீ செல் கண்ணே!

    உன் நம்பிக்கை தீ போல் நெஞ்சிலே

    நிற்கட்டும் கண் முன்னே!

    வரும் பூஞ்சோலைதான்.

  2. 2. மனக் கண்ணில் பார் என் செல்லக் கண்ணே,

    ஓடை நீரில் நனைந்து நிற்கும் தோட்டமே,

    அது தான் உன் வீடே,

    சற்று வாசல் கடந்து நீ பார்

    காண ஏங்கும் ஜீவனை,

    கைவிட்டு மண்ணோடு போனதே,

    இன்று உன்னைத் தேடி,

    அன்போடு அள்ளிக் கொள்ளடி நீ கண்ணே,

    தேவன் பாசத்தால்,

    சாவை வெல்லுமே

    வரும் பூஞ்சோலைதான்.

    (பல்லவி)

    உன் நம்பிக்கை கண் முன்னே

    சிங்கம் போல் பாய்ந்து நீ செல் கண்ணே!

    உன் நம்பிக்கை தீ போல் நெஞ்சிலே

    நிற்கட்டும் கண் முன்னே!

    வரும் பூஞ்சோலைதான்.

    (பிரிட்ஜ்)

    தான் சொன்ன வார்த்தையெல்லாம்,

    நிறைவேற்றுவார் எப்போதுமே,

    உயிர்கள் வாஞ்சை யாவையும்

    யெகோவா கைகள் திருப்தியாக்கும்.

    (பல்லவி)

    உன் நம்பிக்கை கண் முன்னே

    சிங்கம் போல் பாய்ந்து நீ செல் கண்ணே!

    உன் நம்பிக்கை தீ போல் நெஞ்சிலே

    நிற்கட்டும் கண் முன்னே!

    வரும் பூஞ்சோலைதான்,

    வரும் பூஞ்சோலைதான்,

    வரும் பூஞ்சோலைதான்,

    வரும் பூஞ்சோலைதான்.