Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவன் அன்பில் நீ எப்போதும் உண்டு

தேவன் அன்பில் நீ எப்போதும் உண்டு

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. நற்செய்தி பேசும்

    செந்தாழம் பூவே

    உன் மூச்சுக் காற்று விஸ்வாசமே.

    யார் பார்க்காதபோதும் உன் த்யாகம் யாவும்

    காண்பார் யெகோவா கண்மணியே!

    (பல்லவிக்கு முன்)

    விலங்கு பூட்டி கூண்டில் நின்றும் நீயே

    அஞ்சாத தீயே!

    உன் விஸ்வாசம் பேசும் வார்த்தையால்

    வேங்கையாகின்றோம்!

    (பல்லவி)

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் ஓர் ஆட்சியும் இங்கு இல்லை.

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் சக்தியே எங்கும் இல்லை.

    நம் தேவன் அன்பில்

    நீ எப்போதும் உண்டு.

  2. 2. துன்பங்கள் உன்னை

    சூழ்ந்தாலும் என்ன,

    கார் மேகத்தில் மின்னல்

    நீர்த்திடுமோ?

    யெகோவாவை நம்பி நீ செல்லும்போது

    உன்னைப் படைகள் வென்றிடுமோ?

    (பல்லவிக்கு முன்)

    விலங்கு பூட்டி கூண்டில் நின்றும் நீயே

    அஞ்சாத தீயே!

    உன் விஸ்வாசம் பேசும் வார்த்தையால்

    வேங்கையாகின்றோம்!

    (பல்லவி)

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் ஓர் ஆட்சியும் இங்கு இல்லை.

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் சக்தியே எங்கும் இல்லை.

    நம் தேவன் அன்பில்

    நீ எப்போதும் உண்டு.

    நீ நம்பிடு.

    (பிரிட்ஜ்)

    தாங்கிக்கொண்டாய் யாவும் தேவன்மேல் உன் அன்பினால்.

    ஆம், உன் அன்பினால்.

    கைமாறாக கண்ணே, உன்னைத் தேடி வரும் வெற்றிதான்.

    ஆம், உன் வெற்றிதான்.

    (பல்லவி)

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் ஓர் ஆட்சியும் இங்கு இல்லை.

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் சக்தியே எங்கும் இல்லை.

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் ஓர் ஆட்சியும் இங்கு இல்லை.

    வா வீரம் கொண்டு,

    நம் தேவன் அன்பைத் தடுக்கும் சக்தியே எங்கும் இல்லை.

    நம் தேவன் அன்பில்

    நீ எப்போதும் உண்டு.