நீ தான் அன்பே
டவுன்லோட்:
லீட் ஷீட்
1. ஜீவனில் என்னோடு சேர்ந்தவள்
நீயடி விஸ்வாசப் பூவே.
என் மார்பினில் சாய்ந்து
என்னுள் நீ பூக்கிறாய்
தேவன் அன்பை
என் வாழ்வில் சேர்க்கிறாய்.
என்னோடு நீ என்று
ஆனந்தமாகிறேன்.
நீ காட்டும் தாழ்மையில்
நான் மேன்மையாகிறேன்.
(பல்லவி)
என் வாழ்வின் வேர் என்பது
நீ காட்டும் பேரன்பு தான்.
யெகோவா தந்த என் உடலானது
நீ தான் அன்பே.
2. நான் ஏங்கும் போது
என் கன்னம் சாய்த்து நான்
என் ராசாவே
உன் கையில் சேர்கிறேன்.
நம் தேவன் சேவையில்
தோளோடு தோள் சேர்வோம்.
நம் காதல் வாழ்க்கையை
பூஞ்சோலையாக்குவோம்.
(பல்லவி)
என் வாழ்வின் வேர் என்பது
நீ காட்டும் பேரன்பு தான்.
யெகோவா தந்த என் உடலானது
நீ தான் அன்பே.
என் வாழ்வின் வேர் என்பது
நீ காட்டும் பேரன்பு தான்.
யெகோவா தந்த என் உடலானது
நீ தான் அன்பே.
நீ தான் அன்பே,
அன்பே!