Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மன அழுத்தம் மறைந்திட...

நிம்மதியான வாழ்க்கை​—⁠கனவு நிஜமாகும்!

நிம்மதியான வாழ்க்கை​—⁠கனவு நிஜமாகும்!

மன அழுத்தத்தைக் குறைக்க பைபிளிலுள்ள ஆலோசனைகள் நமக்கு உதவி செய்யும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் நம்மால் நீக்க முடியாதுதான். ஆனால், நம் படைப்பாளரால் முடியும். சொல்லப்போனால், நமக்கு உதவி செய்வதற்காக அவர் ஒருவரை நியமித்திருக்கிறார். அவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் இந்தப் பூமியில் இருந்தபோது நிறைய அற்புதங்களைச் செய்தார். சீக்கிரத்தில் உலகம் முழுவதும், அதைவிட பிரமாண்டமான விஷயங்களைச் செய்யப்போகிறார். என்னவெல்லாம் செய்யப்போகிறார்?

இயேசு நோய்களைக் குணப்படுத்துவார், அன்றுபோல்.

‘பலவிதமான வியாதிகளால் . . . பாதிக்கப்பட்டவர்களை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார்.’​—மத்தேயு 4:24.

இயேசு, எல்லாருக்கும் நல்ல வீடும் உணவும் தருவார்.

“ஜனங்கள் [இயேசுவின் ஆட்சியின்கீழ் இருப்பவர்கள்] வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.”​—ஏசாயா 65:21, 22.

இயேசுவின் ஆட்சி, உலகளவில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.

“அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள். சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும், ஆறு தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள். . . . அவருடைய எதிரிகள் மண்ணைக் கவ்வுவார்கள்.”​—சங்கீதம் 72:7-9.

இயேசு, அநியாயத்தை ஒழித்துக்கட்டுவார்.

“[அவர்] ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”​—சங்கீதம் 72:13, 14.

இயேசு, கஷ்டத்துக்கும் மரணத்துக்கும் முடிவுகட்டுவார்.

“இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”​—வெளிப்படுத்துதல் 21:4.