கடவுள் தரும் ஞானமான ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்
“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16) சர்வசக்தியுள்ள கடவுள் தன்னுடைய எண்ணங்களை பைபிள் எழுத்தாளர்களுடைய மனதில் வைத்ததை இது குறிக்கிறது.
தன் ஆலோசனைகளைக் கேட்டு பயன்பெற வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்
“யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன். நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
இங்கே கடவுள் சொல்கிற வார்த்தைகளைக் கவனித்தீர்களா? அவர் நம் ஒவ்வொருவரிடமும் இதைச் சொல்கிறார், நீங்கள் மன அமைதியுடன் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்படுகிறார். அதற்கு உதவ அவர் தயாராகவும் இருக்கிறார்.
கடவுள் தருகிற ஞானமான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள வழி
“எல்லா தேசத்தாருக்கும் நல்ல செய்தி . . . பிரசங்கிக்கப்பட வேண்டும்.”—மாற்கு 13:10.
இந்த ‘நல்ல செய்தியில்’ யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதிகளும் அடங்கும். உதாரணத்துக்கு, கஷ்டங்களுக்கு முடிவு கொண்டுவரப்போவதாக... இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றப்போவதாக... இறந்துபோன அன்பானவர்களை திரும்பவும் உயிரோடு கொண்டுவரப்போவதாக... கொடுத்திருக்கிற வாக்குறுதிகள் அதில் அடங்கியிருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள், பைபிளில் இருக்கிற இந்த நல்ல விஷயங்களை உலகம் முழுவதும் இருக்கிற மக்களுக்குச் சொல்கிறார்கள்.