Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னுடைய பைபிள் கதை புத்தகம்

என்னுடைய பைபிள் கதை புத்தகம்

இது நிஜக் கதைகள் அடங்கிய புத்தகம். உலகிலேயே மிகச் சிறந்த புத்தகமான பைபிளிலிருந்து இக்கதைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடவுளுடைய படைப்பு முதல் நம்முடைய நாள்வரை நிகழ்ந்த உலக சரித்திரத்தை இந்தக் கதைகள் சொல்கின்றன. எதிர்காலத்தில் கடவுள் செய்யப் போகிற காரியங்களைப் பற்றியும் சொல்கின்றன.

பைபிளிலுள்ள முக்கிய தகவலையும் இப்புத்தகம் உங்களுக்குத் தருகிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜனங்களையும் அவர்கள் செய்த காரியங்களையும் பற்றி இது சொல்கிறது. பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழப்போகும் அருமையான நம்பிக்கையைப் பற்றியும் இது சொல்கிறது.

இந்தப் புத்தகத்தில் 116 கதைகள் உள்ளன. இவை எட்டுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் அப்பகுதியின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் சரித்திர சம்பவங்களை காலவரிசைப்படி தருகிறது. ஒவ்வொரு சம்பவமும் சரித்திரத்தில் எப்பொழுது நடந்தது என்பதைக் கற்றுக்கொள்ள இது உங்களுக்கு உதவும்.

இந்தக் கதைகள் எளிய நடையில் சொல்லப்பட்டுள்ளன. ஒருவேளை நீங்களே இந்தக் கதைகளை வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். பெற்றோரே, இந்தக் கதைகளை நீங்கள் திரும்பத் திரும்ப சிறு பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டும்போது அவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் என்பதைக் காண்பீர்கள். அதுமட்டுமல்ல, சிறியோருக்கும் பெரியோருக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிற அநேக விஷயங்கள் இப்புத்தகத்தில் இருப்பதையும் காண்பீர்கள்.

ஒவ்வொரு கதையின் முடிவிலும் பைபிள் வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளுக்கு அடிப்படையாக இருக்கும் இந்த பைபிள் வசனங்களை வாசிக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.