Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 8

இயேசு இறந்ததால் உங்களுக்கு என்ன நன்மை?

இயேசு இறந்ததால் உங்களுக்கு என்ன நன்மை?

நாம் என்றென்றும் உயிரோடு வாழ்வதற்காக இயேசு அவருடைய உயிரையே கொடுத்தார். யோவான் 3:16

இயேசு இறந்து மூன்று நாள் கழித்து, சில பெண்கள் அவருடைய கல்லறைக்குப் போனார்கள். ஆனால், கல்லறை காலியாக இருந்தது. ஏனென்றால், இயேசுவை யெகோவா உயிரோடு எழுப்பியிருந்தார்.

பிறகு, இயேசு தன்னுடைய நண்பர்களுக்கு முன், அதாவது அப்போஸ்தலர்களுக்கு முன் தோன்றினார்.

இயேசுவுக்கு மறுபடியும் ஒரு மனித உடலை யெகோவா கொடுக்கவில்லை, தேவதூதர்களுக்கு இருப்பதைப் போன்ற உடலைக் கொடுத்தார். அவருக்குச் சாவே கிடையாது. அவர் பரலோகத்துக்குப் போனதை சீஷர்கள் பார்த்தார்கள்.

இயேசுவைக் கடவுள் உயிரோடு எழுப்பினார், பிறகு அவரைக் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக்கினார். தானியேல் 7:13, 14

மனிதர்களுக்காக இயேசு தன்னுடைய உயிரையே மீட்புவிலையாகக் கொடுத்தார். (மத்தேயு 20:28) அதனால்தான் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. யெகோவாதான் இந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

பூமியை ஆட்சி செய்கிற அதிகாரத்தை இயேசுவிடம் யெகோவா கொடுத்திருக்கிறார். அவருக்கு உண்மையாக இருக்கும் 1,44,000 பேரை பூமியிலிருந்து பரலோகத்துக்கு உயிரோடு எழுப்புவார். இயேசுவும் இந்த 1,44,000 பேரும் சேர்ந்து நீதி நியாயத்தோடு ஆட்சி செய்வார்கள். இந்தப் பரலோக அரசாங்கத்தைத்தான் கடவுளுடைய அரசாங்கம் என்று சொல்கிறோம்.—வெளிப்படுத்துதல் 14:1-3.

அந்த அரசாங்கம் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றும். போர், கொலை, கொள்ளை, பசி பட்டினி இருக்காது. யாருமே ஏழையாக இருக்க மாட்டார்கள். எல்லாரும் சந்தோஷமாக இருப்பார்கள். —சங்கீதம் 145:16.