Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 1

யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்?

டென்மார்க்

தைவான்

வெனிசுவேலா

இந்தியா

யெகோவாவின் சாட்சிகள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? எங்களில் யாராவது உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் குடியிருக்கலாம், உங்களோடு வேலை செய்யலாம், உங்களோடு பள்ளிக்கூடத்தில் படிக்கலாம். இல்லையென்றால், பைபிளைப் பற்றி உங்களிடம் பேசியிருக்கலாம். நாங்கள் யார், ஏன் பைபிளைப் பற்றி எல்லாருக்கும் சொல்கிறோம்?

நாங்கள் சாதாரண ஜனங்கள்தான். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், என எல்லாரும் எங்கள் சபையில் இருக்கிறார்கள். வித்தியாசமான இனம், மொழி, கலாச்சாரத்திலிருந்து வந்தவர்களும் எங்கள் சபையில் இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சியாவதற்கு முன்பு எங்களில் சிலர் மற்ற மதங்களில் இருந்தார்கள், சிலர் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்தார்கள். ஆனால் நாங்கள் எல்லாருமே பைபிளை நன்றாகப் படித்தோம். (அப்போஸ்தலர் 17:11) பைபிளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாமே உண்மை என்று புரிந்துகொண்டோம். அதற்குப் பிறகுதான் யெகோவாவின் சாட்சியாக வேண்டும் என்று முடிவு செய்தோம்.

பைபிள் படிப்பது எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. எல்லாரையும் போல் எங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன, எங்களிடமும் குறைகள் இருக்கின்றன. ஆனால், பைபிள் சொல்வதுபோல் நடக்க முயற்சி செய்வதால், எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. (சங்கீதம் 128:1, 2) மற்றவர்களுடைய வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால்தான், பைபிளில் இருக்கும் அருமையான விஷயங்களை எல்லாருக்கும் சொல்கிறோம்.

பைபிள் சொல்வதுபோல் நடந்துகொள்ள முயற்சி செய்கிறோம். அதனால் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. சமுதாயத்திற்குப் பிரயோஜனமாக இருப்பதற்கும் நல்ல குடிமக்களாக இருப்பதற்கும் பைபிள் எங்களுக்கு உதவி செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மரியாதை காட்டுவதற்கு, நேர்மையாக நடந்துகொள்வதற்கு, அன்பாக பழகுவதற்கு பைபிளிலிருந்து கற்றுக்கொண்டோம். குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதற்கு பைபிள் உதவி செய்திருக்கிறது. ஒழுக்கமாக வாழ்வதற்குக்கூட கற்றுக்கொடுத்திருக்கிறது. ‘பாரபட்சம் காட்டாத கடவுளை’ வணங்குவதால் நாங்களும் பாரபட்சம் காட்டுவதில்லை. நாடு, இனம் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்பாக ஒரே குடும்பம் போல் இருக்கிறோம். நாங்கள் சாதாரண ஜனங்கள்தான், ஆனாலும் மற்றவர்களிலிருந்து நாங்கள் வித்தியாசமான ஜனங்களாக இருக்கிறோம்.—அப்போஸ்தலர் 4:13; 10:34, 35.

  • எந்த விதத்தில் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களைப் போல் இருக்கிறார்கள்?

  • பைபிள் சொல்வதுபோல் நடப்பதால் யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நன்மைகள் கிடைத்திருக்கிறது?