Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 2

யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?

யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?

நோவா

ஆபிரகாம், சாராள்

மோசே

இயேசு கிறிஸ்து

யெகோவாவின் சாட்சிகள்—இந்தப் பெயரை கேட்டதும், ஏதோ ஒரு புது மதம் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், 2,700 வருடங்களுக்கு முன்பே யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள். யெகோவாவை வணங்கிய ஜனங்களை அவருடைய ‘சாட்சிகள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 43:10-12) எங்களுக்கு 1931 வரை பைபிள் மாணாக்கர்கள் என்ற பெயர் இருந்தது. அதற்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது. ஏன் தெரியுமா?

இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய கடவுள் யார் என்று தெரிந்துகொள்ளலாம். பழங்காலத்து பைபிள் சுருள்களில் யெகோவா என்ற பெயர் ஆயிரக்கணக்கான தடவை இருக்கிறது. ஆனால், பைபிளை மொழிபெயர்த்தவர்கள் அந்தப் பெயரை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கர்த்தர், ஆண்டவர் என்று போட்டுவிட்டார்கள். மோசேயிடம் கடவுள் பேசியபோது யெகோவா என்ற அவருடைய பெயரைச் சொன்னார். அதோடு, “என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்” என்றும் சொன்னார். (யாத்திராகமம் 3:15) இப்படி, அவருக்கும் பொய் தெய்வங்களுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண்பித்தார். யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய முக்கியமான வேலையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் இருந்தே நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். ஆபேல்தான் யெகோவாவுக்கு முதல் சாட்சியாக இருந்தார். அதற்குப் பிறகு வந்த நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, தாவீது என நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்தார்கள். இவர்கள் எல்லாரும் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால்தான், “திரண்ட மேகம் போன்ற இத்தனை சாட்சிகள்” யெகோவாவுக்கு இருந்திருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:4–12:1) ஒரு நிரபராதிக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்வது போல் நாங்களும் கடவுளுக்கு ஆதரவாக சாட்சி சொல்கிறோம். அதாவது, அவரைப் பற்றிய உண்மைகளை எல்லாருக்கும் சொல்கிறோம்.

இயேசுவைப் போல் நடந்துகொள்கிறோம். இயேசுவை, “நம்பகமான, உண்மையான சாட்சி” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 3:14) ‘கடவுளுடைய பெயரை தெரியப்படுத்தினேன்’ என்று இயேசு பூமியில் இருந்தபோது சொன்னார். அதோடு, “சத்தியத்தைப் பற்றிச் சாட்சி” கொடுத்தார். அதாவது, கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார். (யோவான் 17:26; 18:37) இயேசுவைப் போல் நடந்துகொள்ள ஆசைப்படுகிற எல்லாரும் கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதைத்தான் யெகோவாவின் சாட்சிகள் செய்கிறார்கள்.

  • பைபிள் மாணாக்கர்களுக்கு ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது?

  • எவ்வளவு காலமாக யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள்?

  • யெகோவாவுக்கு முக்கியமான சாட்சி யார்?