Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 14

பூமி முழுவதும் ஒரே ஆட்சி

பூமி முழுவதும் ஒரே ஆட்சி

எந்த ஆட்சியை பத்தி இப்போ படிக்கப்போறோம்?— கடவுளோட ஆட்சியை பத்தி. அந்த ஆட்சியில இந்தப் பூமி ஒரு அழகான தோட்டமா மாறப்போகுது. உனக்கு அதை பத்தி தெரிஞ்சிக்க ஆசையா?—

ஆட்சி செய்யணும்னா அதுக்கு ஒரு ராஜா வேணும். கடவுளோட ஆட்சியில ராஜா யார்?— இயேசுதான் ராஜா. அவர் பரலோகத்தில இருக்கிறார். சீக்கிரத்தில அவர்தான் நம்ம எல்லாருக்கும் ராஜாவா இருப்பார். இயேசு பூமியை ஆட்சி செய்யும்போது சந்தோஷமா இருக்குமா?—

அழகான பூமியில நீ என்ன செய்வ?

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். எல்லாரும் அன்பா இருப்பாங்க. யாருமே சண்டை போட மாட்டாங்க. நோய் வராது, யாரும் சாக மாட்டாங்க. கண்ணு தெரியாதவங்களுக்கு கண்ணு தெரியும். காது கேட்காதவங்களுக்குக் காது கேட்கும். நடக்க முடியாதவங்க துள்ளிக் குதிச்சு ஓடுவாங்க. விதவிதமா சாப்பாடு கிடைக்கும். மிருகங்கள்கூட ஒற்றுமையா இருக்கும். யாரையும் கடிக்காது. செத்துப்போனவங்க உயிரோட வருவாங்க. ரெபேக்காள், ராகாப், தாவீது, எலியா எல்லாரும் உயிரோட வருவாங்க. அவங்ககிட்ட போய் நீ பேசுவியா?—

யெகோவா உன்மேல உயிரையே வைச்சிருக்காரு. நீ சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படுறாரு. யெகோவாவை பத்தி நிறைய படிச்சி தெரிஞ்சிக்கோ. அவர் பேச்சை கேளு. அப்போ நீயும் அழகான பூமியில எப்பவும் வாழ முடியும். அந்த பூமியில வாழ உனக்கு ஆசையா?—