Skip to content

கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?

கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • செய்வார்

  • செய்ய மாட்டார்

  • செய்யலாம்

கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

“பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது.”—தானியேல் 2:44.

“நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும்.”—ஏசாயா 9:6, புதிய உலக மொழிபெயர்ப்பு.

இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

  • கடவுளுடைய நீதியான அரசாங்கத்தால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.—ஏசாயா 48:17, 18.

  • புதிய பூமியில், ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.

கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?

நிச்சயம் நம்பலாம், இரண்டு காரணங்களுக்காக:

  • கடவுளுடைய அரசாங்கம் என்னென்ன செய்யும் என்பதை இயேசு செய்து காட்டினார். கடவுளுடைய அரசாங்கம் வரவேண்டும், கடவுளுடைய விருப்பம் இந்தப் பூமியில் நிறைவேற வேண்டும் என்று இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம் ஜெபம் செய்ய சொன்னார். (மத்தேயு 6:9, 10) அந்தச் சமயத்தில் என்னென்ன நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை இயேசு செய்து காட்டினார்.

    இயேசு பூமியிலிருந்தபோது, பசியாய் இருந்தவர்களுக்குச் சாப்பாடு கொடுத்தார், நோயாளிகளை குணமாக்கினார், இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்! (மத்தேயு 15:29-38; யோவான் 11:38-44) இயேசு இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது, பசிபட்டினி, நோய்நொடி போன்ற எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பதைச் செய்து காட்டினார்.—வெளிப்படுத்துதல் 11:15.

  • கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் பூமியை ஆட்சிசெய்யும் என்பதற்கு இந்த உலக நிலைமைகளே அத்தாட்சி. கடவுளுடைய அரசாங்கம் பூமியில் சமாதானத்தை கொண்டுவருவதற்கு முன்பு, இந்த உலகத்தில் போர்களும் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் அதிகமாக இருக்கும் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 24:3, 7.

    இன்றைக்கு உலகத்தில் இதைத்தான் பார்க்கிறோம். அதனால், கடவுளுடைய அரசாங்கம் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் நிச்சயம் முடிவுகட்டும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

சிந்தித்துப் பாருங்கள்

கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பைபிளின் பதில்: சங்கீதம் 37:29; ஏசாயா 65:21-23.