Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 11​—⁠முன்னுரை

பகுதி 11​—⁠முன்னுரை

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உள்ள விஷயங்களை இந்தப் பகுதியில் படிப்போம். ஒரு சின்ன ஊரில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் இயேசு பிறந்தார். அவருடைய அப்பா மர வேலை செய்தார். அவரோடு சேர்ந்து இயேசு வேலை செய்தார். இயேசுதான் மனிதர்களைக் காப்பாற்றப் போகிறவர். பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக இயேசுவை யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார். இயேசுமேல் யெகோவாவுக்கு ரொம்ப அன்பும் அக்கறையும் இருந்தது. அதனால், கடவுள்பக்தியுள்ள ஒரு குடும்பத்தில், அன்பான சூழலில் அவர் வளரும்படி பார்த்துக்கொண்டார் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். ஏரோது இயேசுவைக் கொன்றுவிடாதபடி யெகோவா எப்படிக் காப்பாற்றினார் என்பதையும், யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் சொல்லுங்கள். இயேசுவுக்கு வழியைத் தயார்படுத்த யோவானை யெகோவா தேர்ந்தெடுத்ததைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். யெகோவாவின் ஞானமான ஆலோசனைகள் தனக்குப் பிடிக்கும் என்பதை இயேசு சின்ன வயதிலிருந்தே எப்படிக் காட்டினார் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

இந்தப் பகுதியில்

பாடம் 68

எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கிறது

எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கும்வரை அவளுடைய கணவரால் பேச முடியாது என்று தேவதூதர் ஏன் சொன்னார்?

பாடம் 69

காபிரியேல் மரியாளைச் சந்திக்கிறார்

அவர் சொன்ன செய்தி அவளுடைய வாழ்க்கையையே மாற்றியது.

பாடம் 70

இயேசு பிறந்ததைத் தேவதூதர்கள் அறிவிக்கிறார்கள்

அறிவிப்பைக் கேட்ட மேய்ப்பர்கள் உடனடியாக கிளம்பினார்கள்.

பாடம் 71

இயேசுவை யெகோவா காப்பாற்றினார்

ஒரு கெட்ட ராஜா இயேசுவைக் கொல்ல நினைக்கிறான்.

பாடம் 72

இளம் இயேசு

ஆலயத்தில் இருந்த போதகர்கள் ஏன் இயேசுவைப் பார்த்து அசந்துபோனார்கள்?

பாடம் 73

மேசியா வரப்போவதை யோவான் அறிவிக்கிறார்

யோவான் வளர்ந்த பிறகு, ஒரு தீர்க்கதரிசியாக ஆனார். மேசியா வரப்போவதைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார். அதைக் கேட்டு மக்கள் என்ன செய்தார்கள்?