பகுதி 13—முன்னுரை
தவறு செய்யும் இயல்புள்ள மக்களுக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுக்க இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். அவர் இறந்தாலும், இந்த உலகத்தை ஜெயித்தார். யெகோவா தன்னுடைய மகனுக்கு உண்மையாக இருந்து, அவருக்கு மறுபடியும் உயிர் கொடுத்தார். சாகும்வரை இயேசு மனத்தாழ்மையாக மற்றவர்களுக்குச் சேவை செய்தார், அவர்கள் செய்த தவறுகளை மன்னித்தார். உயிரோடு எழுந்த பிறகு, தன்னுடைய சீஷர்களுக்கு முன் தோன்றினார். தான் கொடுத்த முக்கியமான வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அந்த வேலையை நாமும் செய்ய வேண்டும் என்பதை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ள உதவுங்கள்.
இந்தப் பகுதியில்
பாடம் 87
இயேசுவின் கடைசி பஸ்கா
தன்னுடைய அப்போஸ்தலர்களோடு கடைசியாக ஒன்றுசேர்ந்து சாப்பிட்ட சமயத்தில், முக்கியமான அறிவுரைகளை இயேசு அவர்களுக்குக் கொடுத்தார்.
பாடம் 88
இயேசு கைது செய்யப்படுகிறார்
இயேசுவைக் கைது செய்வதற்காக, வாள்களையும் தடிகளையும் வைத்திருக்கிற ஒரு பெரிய கும்பலோடு யூதாஸ் இஸ்காரியோத்து கெத்செமனே தோட்டத்துக்கு வந்தான்.
பாடம் 89
இயேசுவைத் தெரியாது என்று பேதுரு சொல்கிறார்
காய்பாவின் வீட்டு முற்றத்தில் என்ன நடந்தது? அவருடைய வீட்டுக்குள் இயேசுவுக்கு என்ன நடந்தது?
பாடம் 91
இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்
இயேசு கொலை செய்யப்பட்ட பிறகு என்ன ஆச்சரியமான சம்பவங்கள் நடந்தன?
பாடம் 92
மீனவர்கள்முன் இயேசு தோன்றுகிறார்
அவர்களுடைய கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக அவர் என்ன செய்தார்?
பாடம் 93
இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப் போகிறார்
அதற்கு முன், தன்னுடைய சீஷர்களுக்கு மிக முக்கியமான ஆலோசனைகளைக் கொடுத்தார்.