Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 8

நம் தஞ்சம் யெகோவா

நம் தஞ்சம் யெகோவா

(சங்கீதம் 91)

  1. 1. நம் நெஞ்சம் தேடும் தஞ்சம்,

    தேவன் யெகோவாவே.

    நாம் ஓடிச் சேர வேண்டும்

    தந்தை நிழலிலே.

    நம்பி வந்தோரை தேவன்தான்

    ஏமாற்றிப் போனதில்லையே.

    மாறாத அன்பு கொண்ட

    யெகோவாதான் நம் இமயம்.

  2. 2. நம் பக்கம் ஆயிரம் பேர்

    வீழ்ந்தால் வீழட்டுமே.

    யெகோவா பாய்ந்து வந்து,

    காப்பார் தன் சிறகால்.

    தீங்கு ஒன்றும் நெருங்காது,

    பக்கம் கூட திரும்பாது.

    நல்லோரை பாதுகாப்பார்,

    மதில்போல் நம் முன் இருப்பார்.

  3. 3. நாம் போகும் பாதை எல்லாம்

    வேடன் பொறி வைப்பான்.

    ராப்பகல் என்று தாக்க

    நாளும் குறி வைப்பான்.

    என்ன வந்தாலும் அஞ்சாதே!

    வானே வீழ்ந்தாலும் ஓடாதே!

    யெகோவா கோட்டை ஆவார்,

    நம்மை சூழ்ந்து காத்திடுவார்.

(பாருங்கள்: சங். 97:10; 121:3, 5; ஏசா. 52:12.)