பாடல் 10
யெகோவாவை புகழ்வேன்
-
1. பாடுவேன்! நம் யெகோவாவை
போற்றியே எங்கும் பாடுவேன்!
சொல்லுவேன்! தேவனின் நாள்தான்
வேகமாக வருகின்றதே.
தேவன் குறித்த காலம் இதுதான்!
ஏசுவும் மன்னராய் ஆனார்!
ஏங்கும் மனதில் நீங்கும் துயரே-
அந்த ஆட்சியை சொல்வேனே!
(பல்லவி)
பாடுவேன்! நம் யெகோவாவை!
போற்றுவேன் நான் பூமியெங்குமே!
-
2. பூமியில் பூங்குயில்கள் போல்,
தேவனை வாழ்த்தி பாடுவேன்.
நெஞ்சினில் அச்சமில்லாமல்,
சொல்லுவேன் நம் தேவன் பேரையே!
சர்வ வல்லவர் என்றபோதிலும்,
தாழ்மையின் சிகரம் தானே!
கண்கள் கலங்கி உள்ளம் பேசிடும்
வார்த்தையும் கேட்கிறார் தானே!
(பல்லவி)
பாடுவேன்! நம் யெகோவாவை!
போற்றுவேன் நான் பூமியெங்குமே!
(பாருங்கள்: சங். 89:27; 105:1; எரே. 33:11.)