Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 18

மீட்புவிலைக்கு நன்றி!

மீட்புவிலைக்கு நன்றி!

(லூக்கா 22:20)

  1. 1. என் நெஞ்சின் நன்றியை

    உம் பாதம் வைக்கின்றேன்.

    உம் பேரன்பால் இந்தப்

    பாவியும் வாழுகின்றேன்.

    உம் மைந்தன் ஆருயிர்

    எனக்கே தந்தீரே,

    மாபெரும் தியாகம் செய்தீரே

    என் யெகோவாவே!

    (பல்லவி)

    தன் உயிர் தந்து காத்தாரே!

    தன் ரத்தம் சிந்தி மீட்டாரே!

    என் உயிர் பொங்க நன்றி சொல்லியே,

    நான் வாழ்வேனே!

  2. 2. தயங்காமல் தன்னை

    உயிர் தியாகம் செய்தார்.

    குறைகள் இல்லா தன்

    வாழ்வையே ஏசு தந்தார்.

    கண்ணீரில் நீந்தும்

    எம்மை மீட்க வந்தாரே,

    காயங்கள் தாங்கியே

    எம்மை வாழ வைத்தாரே!

    (பல்லவி)

    தன் உயிர் தந்து காத்தாரே!

    தன் ரத்தம் சிந்தி மீட்டாரே!

    என் உயிர் பொங்க நன்றி சொல்லியே,

    நான் வாழ்வேனே!

(பாருங்கள்: எபி. 9:13, 14; 1 பே. 1:18, 19)