Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 53

ஊழியத்துக்கு தயாரிப்போம்

ஊழியத்துக்கு தயாரிப்போம்

(எரேமியா 1:17)

  1. 1. காலைதான்

    வந்தாலுமே

    கண்ணில் தூக்கம் கொல்லுதே.

    வெளியில் மேகம்

    கருத்தாலே மனம்...

    சுருண்டு தூங்கவே சொல்லுதே,

    சொல்லுதே.

    (பல்லவி)

    ஒளியின் செய்தி சொல்ல போவாய்

    நீயும் தயாரித்தால்.

    விழியில் தீப்பொறி தெறிக்கும்

    நீ வேண்டினால்.

    வழியில் தூதர் பாதை காட்ட,

    தனியில்லை நீயே.

    இனிய நண்பன் கூட சேர்ந்து

    செல்வாய் நீயே!

  2. 2. சந்தோஷம்

    நெஞ்சில் வரும்

    சேவை நீயும் செய்தாலே.

    உந்தன் பாதம் கீழ்

    படியும் தூசியும்,

    ஜொலிக்கும் நம் தேவன் கண்ணிலே,

    கண்ணிலே.

    (பல்லவி)

    ஒளியின் செய்தி சொல்ல போவாய்

    நீயும் தயாரித்தால்.

    விழியில் தீப்பொறி தெறிக்கும்

    நீ வேண்டினால்.

    வழியில் தூதர் பாதை காட்ட,

    தனியில்லை நீயே.

    இனிய நண்பன் கூட சேர்ந்து

    செல்வாய் நீயே!