பாடல் 65
முன்னேறு!
-
1. நண்பனே, நண்பனே, நீயும் முன்னேறு!
உண்மையை பேசிடு, ஊழியத்தில் முன்னேறு!
திறமை வளர்க்க உழைத்திடு நீ,
துணை செய்வார் உன் தேவன்.
உறையில் உறங்கும் வாளில்தான்,
துருக்கள் பிடிக்கும், அரிக்கும்.
உனது திறமை உறங்கிடுமோ,
தினம் கூர்மை ஆகாதோ?
-
2. நண்பனே, நண்பனே, என்றும் அஞ்சாதே!
உனக்குள் எரியும் தீயை நீயும் கிள்ளாதே.
எதிர்ப்பு வந்தாலும் ஒதுங்கிடாதே,
உயிர் செய்தி சொல் நீயே.
மின்னலே, மின்னலே, அஞ்சாதே!
கண்ணிலே கலங்கி நிற்காதே!
ஒளிதான் இருளை கிழித்தெறியும்,
ஒளியின் பிள்ளை நீயே!
-
3. நண்பனே, நண்பனே, விதை விதைத்தால்,
திரும்ப திரும்ப தண்ணீர் ஊற்ற வேண்டுமே.
அன்பிலே திறமை கலந்திருந்தால்,
நெஞ்சில் ஏறும் உன் சொல்தான்.
திரும்ப திரும்ப சந்திப்பாய்,
இரும்பை மெழுகாய் உருக்க.
திறமை வளர்த்து முன்னேறிச் சென்றால்,
சந்தோஷம் உன் வாழ்வில்தான்.
(பாருங்கள்: பிலி. 1:27; 3:16; எபி. 10:39.)