பாடல் 99
மாபெரும் குடும்பம்
-
1. வெற்றி நடை போட்டு நாங்கள்
வீரர்கள் போல் செல்வோம்.
எங்கள் உயிர் போனாலும்
விஸ்வாசம் போகாது.
நாங்கள் பெரும் கூட்டம்தான்
நாளும் வளர்கின்றோம்.
தேசம் இனம் பேதம் இல்லாமல்
“யா”வைப் புகழ்கின்றோம்.
-
2. மேகத் திரள் போல நாங்கள்
தூரம் வரை செல்வோம்.
வாடும் உயிர்கள் பார்த்து
வாழ்வின் மழை பெய்வோம்.
ஆனாலும் எங்கள் நெஞ்சும்
வாடும் சில நேரம்.
ஏசு தரும் ஊக்கத்தால் மீண்டும்
உள்ளம் மகிழ்ந்தாடும்.
-
3. நாங்கள் பெரும் கூட்டம் ஆனோம்.
சேவை தினம் செய்வோம்.
தேவன் குடை கீழ் சேர்ந்து,
ராஜ்யத்தை சொல்கின்றோம்.
என்றும் இறைவன் கைகள்
எங்கள் உயிர் காக்கும்.
காடு மலை தீவுகள் எங்கும்
எங்கள் குரல் கேட்கும்.
(பாருங்கள்: ஏசா. 52:7; மத். 11:29; வெளி. 7:15.)