பாடல் 117
நல்மனம்
-
1. நல்ல நல்ல பரிசெல்லாம்
அப்பா நீங்கள் தந்ததே.
நன்மை செய்ய உங்கள் கைகள்
ஒருநாளும் ஓயாதே.
கனிவான உங்கள் உள்ளம்
கடல் போல பெரிதே,
அழியாத அன்பின் ஊற்று
நீங்கள்தான் யெகோவாவே!
-
2. உங்களைப்போல் நல்மனம்தான்
வேண்டுமே யெகோவாவே!
நன்மை செய்ய வாய்ப்பு தேடும்
நல்ல உள்ளம் வேண்டுமே.
முகம் தாண்டி உள்ளம் பார்த்து
அன்பு காட்ட தூண்டுங்கள்.
உடைந்தோரின் நெஞ்சம் தேடி
உயிர் காக்க செய்யுங்கள்.
-
3. குறையுள்ள எந்தன் நெஞ்சில்
நிறைகள்தான் பார்த்தீர்கள்.
உங்களைப் போல் நானும் பார்க்க
மன்னிக்கும் மனம் வேண்டும்.
கால்கள் போகும் வழியெல்லாம்
நன்மைகள் நான் செய்திட,
அப்பா உங்கள் சக்திக்காக
தினம் கெஞ்சி கேட்கின்றேன்.
(பாருங்கள்: சங். 103:10; மாற். 10:18; கலா. 5:22; எபே. 5:9.)