Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏமாற்றம்

ஏமாற்றம்

மற்றவர்கள் நம்மைக் காயப்படுத்தும்போதோ, நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக நடந்துகொள்ளும்போதோ, நமக்குத் துரோகம் செய்யும்போதோ ஏற்படும் ஏமாற்ற உணர்வு

சங் 55:12-14; லூ 22:21, 48

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 8:1-6—இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று விடாப்பிடியாகக் கேட்டபோது சாமுவேல் தீர்க்கதரிசி வேதனைப்பட்டார், மனம் உடைந்துபோனார்

    • 1சா 20:30-34—தன் அப்பா சவுல் தன்மேல் பயங்கரமாகக் கோபப்பட்டுக் கேவலமாகப் பேசியபோது, யோனத்தான் மனம் நொந்துபோனார்

  • ஆறுதலான வசனங்கள்:

  • ஆறுதலான பைபிள் பதிவு(கள்):

    • சங் 55:12-14, 16-18, 22—நெருங்கிய நண்பரான அகித்தோப்பேல் தனக்குத் துரோகம் செய்தபோது தாவீது ராஜா தன் பாரத்தையெல்லாம் யெகோவாமேல் போட்டுவிட்டார், அதனால் அவருக்கு ஆறுதல் கிடைத்தது

    • 2தீ 4:16-18—பவுலுக்குப் பிரச்சினைகள் வந்தபோது மனிதர்கள் அவரைக் கைவிட்டுவிட்டார்கள், ஆனால் யெகோவாவிடமிருந்தும் அவர் கொடுத்த நம்பிக்கையிலிருந்தும் பவுலுக்குப் பலம் கிடைத்தது

நம்முடைய பாவங்களையும் பலவீனங்களையும் நினைத்து நொந்துபோவது

யோபு 14:4; ரோ 3:23; 5:12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 51:1-5—யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததை நினைத்து தாவீது ராஜா நொந்துபோனார்

    • ரோ 7:19-24—தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டியதை நினைத்து பவுல் ரொம்பவே வேதனைப்பட்டார்

  • ஆறுதலான வசனங்கள்:

  • ஆறுதலான பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 9:2-5—தாவீது ராஜா சில மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும் அவர் உத்தமமாக நடந்துகொண்டதை யெகோவா ஞாபகம் வைத்திருந்தார்

    • 1தீ 1:12-16—முன்பு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும் தனக்கு இரக்கம் கிடைக்கும் என்று பவுல் உறுதியாக நம்பினார்