உற்சாகம்
கடவுளுடைய ஊழியர்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது ஏன் முக்கியம்?
ஏசா 35:3, 4; கொலோ 3:16; 1தெ 5:11; எபி 3:13
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 32:2-8—அசீரியர்கள் தாக்க வந்தபோது, தைரியமாக இருக்கச் சொல்லி எசேக்கியா ராஜா தன் மக்களை உற்சாகப்படுத்தினார்
-
தானி 10:2, 8-11, 18, 19—தள்ளாத வயதில் தெம்பு இல்லாமல் இருந்த தானியேல் தீர்க்கதரிசியை ஒரு தேவதூதர் உற்சாகப்படுத்தினார், பலப்படுத்தினார்
-
மூப்பர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?
இதையும் பாருங்கள்: மத் 11:28-30
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
உபா 3:28; 31:7, 8—யெகோவா சொன்னபடியே, அடுத்த தலைவரான யோசுவாவுக்கு மோசே ஊக்கமும் தைரியமும் கொடுத்தார்
-
அப் 11:22-26; 14:22—துன்புறுத்தல் சமயத்தில் அந்தியோகியாவில் இருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலர்களான பவுலும் பர்னபாவும் உற்சாகப்படுத்தினார்கள்
-
மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு அவர்களை மனதார பாராட்டுவதும் ஏன் முக்கியம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
நியா 11:37-40—யெகோவாவின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துவிட்ட யெப்தாவின் மகளைப் பாராட்டுவதற்காக இஸ்ரவேல் பெண்கள் வருஷா வருஷம் அவளைப் போய்ப் பார்த்தார்கள்
-
வெளி 2:1-4—எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களை இயேசு கண்டித்துத் திருத்த வேண்டியிருந்த சமயத்தில்கூட, அவர்கள் செய்துவந்த சில நல்ல விஷயங்களுக்காக அவர்களைப் பாராட்டினார்
-
நாம் எப்படி நம் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தலாம்?
நீதி 15:23; எபே 4:29; பிலி 1:13, 14; கொலோ 4:6; 1தெ 5:14
இதையும் பாருங்கள்: 2கொ 7:13, 15, 16
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 23:16-18—யோனத்தான், பிரச்சினையில் தவித்த தன் நண்பன் தாவீதைத் தேடிப் போய்ப் பார்த்து அவரை உற்சாகப்படுத்தினார்
-
யோவா 16:33—இயேசு தன் முன்மாதிரியின் மூலம் தன் சீஷர்களை உற்சாகப்படுத்தினார்; தன்னைப் போலவே அவர்களாலும் இந்த உலகத்தை ஜெயிக்க முடியுமென்று சொல்லிப் பலப்படுத்தினார்
-
அப் 28:14-16—விசாரணைக்காக ரோமுக்குப் போகும் வழியில் தன்னை உற்சாகப்படுத்த வந்த சகோதரர்களைப் பார்த்து பவுல் தைரியம் அடைந்தார்
-
அவமரியாதையாக நடந்துகொள்வதையும் குறை சொல்வதையும் தவிர்ப்பது ஏன் முக்கியம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
எண் 11:10-15—மக்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் புலம்பிக்கொண்டும் இருந்ததால் மோசே ரொம்பவே சோர்ந்துபோனார்
-
எண் 13:31, 32; 14:2-6—உளவு பார்த்துவிட்டு வந்த பத்துப் பேர் விசுவாசம் இல்லாமல் பேசியதால் மக்கள் சோர்ந்துபோனார்கள், சீக்கிரத்தில் கலகமும் செய்தார்கள்
-
சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிடுவது நமக்கு எப்படித் தைரியத்தைக் கொடுக்கும்?
நீதி 27:17; ரோ 1:11, 12; எபி 10:24, 25; 12:12
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 20:1-19—ஒரு பெரிய படை தாக்க வந்தபோது யோசபாத் ராஜா தன் மக்களோடு ஒன்றுகூடி வந்து ஜெபம் செய்தார்
-
அப் 12:1-5, 12-17—அப்போஸ்தலன் யாக்கோபு கொல்லப்பட்ட பிறகும், அப்போஸ்தலன் பேதுரு சிறையில் தள்ளப்பட்ட பிறகும், எருசலேமில் இருந்த சகோதரர்கள் ஒன்றுகூடி வந்து ஜெபம் செய்தார்கள்
-
நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது, கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள நமக்குப் பலம் கொடுக்கும் என்று எப்படிச் சொல்லலாம்?
அப் 5:40, 41; ரோ 8:35-39; 1கொ 4:11-13; 2கொ 4:16-18; 1பே 1:6, 7
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 39:19-23; 40:1-8—பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, அநியாயமாகச் சிறையில் தள்ளப்பட்டபோதும் யோசேப்பு கடவுள்மேல் நம்பிக்கையாகவே இருந்தார், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் ஆசைப்பட்டார்
-
2ரா 6:15-17—ஒரு படை திரண்டு வந்தபோது எலிசா பயப்படவில்லை, தன் ஊழியனும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பதற்காக ஜெபம் செய்தார்
-
யெகோவாவின் வார்த்தை தரும் உற்சாகம்
நமக்கு உதவி செய்வதாக யெகோவா எப்படியெல்லாம் உறுதி அளித்திருக்கிறார்?
யெகோவா காட்டும் பொறுமையையும் இரக்கத்தையும் பற்றி யோசித்துப் பார்ப்பது நமக்கு எப்படி உற்சாகம் தரும்?
சோர்ந்துபோனவர்களுக்கு யெகோவா என்ன செய்வார்?
சங் 46:1; ஏசா 12:2; 40:29-31; பிலி 4:13
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 1:10, 11, 17, 18—அன்னாள் மனமுடைந்துபோயிருந்த சமயத்தில் ஜெபம் செய்தாள், யெகோவா அவளுக்கு மன நிம்மதியைக் கொடுத்தார்
-
1ரா 19:1-19—எலியா தீர்க்கதரிசி சோர்ந்துபோயிருந்தபோது யெகோவா அவருக்கு உணவும் தண்ணீரும் தந்தார்; அதோடு, எதிர்கால நம்பிக்கையைப் பற்றிச் சொல்லி அவருக்கு உற்சாகமும் ஆறுதலும் தந்தார்
-
பைபிள் தரும் வாக்குறுதிகள் நமக்கு எப்படித் தைரியத்தைக் கொடுக்கின்றன?
2நா 15:7; சங் 27:13, 14; எபி 6:17-19; 12:2
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோபு 14:1, 2, 7-9, 13-15—யோபு ரொம்பவே சோர்ந்துபோயிருந்த சமயத்தில்கூட, உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நினைத்து ஆறுதல் அடைந்தார்
-
தானி 12:13—கிட்டத்தட்ட 100 வயதை எட்டியிருந்த தானியேல், எதிர்காலத்தில் அவருக்கு ஆசீர்வாதம் கிடைக்கப்போவதாக ஒரு தேவதூதர் சொன்னபோது உற்சாகம் அடைந்தார்
-
யெகோவாவிடம் ஜெபம் செய்வதும் அவரைப் பற்றி ஆழமாக யோசிப்பதும் நமக்கு எப்படி உற்சாகத்தைக் கொடுக்கும்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 30:1-9—வேதனையில் தவித்தபோது தாவீது ராஜா யெகோவாவிடம் ஜெபம் செய்தார், பலம் பெற்றார்
-
லூ 22:39-43—உச்சக்கட்ட சோதனையின்போது இயேசு உருக்கமாக ஜெபம் செய்தார், அப்போது யெகோவா ஒரு தூதரை அனுப்பி இயேசுவை உற்சாகப்படுத்தினார்
-
நல்ல செய்தியைக் கேட்கும்போது நமக்கு எப்படி உற்சாகம் கிடைக்கிறது, அதை மற்றவர்களுக்குச் சொல்வது ஏன் நல்லது?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
அப் 15:2-4—பவுலும் பர்னபாவும் தாங்கள் சந்தித்த சபைகளை ரொம்ப உற்சாகப்படுத்தினார்கள்
-
3யோ 1-4—சத்தியத்தைத் தன்னிடம் கற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்து கடவுளுக்கு உண்மையாக நடப்பதைக் கேள்விப்பட்டபோது வயதான அப்போஸ்தலன் யோவான் ரொம்ப உற்சாகம் அடைந்தார்
-