மனத்தாழ்மை
மனத்தாழ்மை உள்ளவர்களையும் தலைக்கனம் பிடித்தவர்களையும் யெகோவா எப்படிப் பார்க்கிறார்?
சங் 138:6; நீதி 15:25; 16:18, 19; 22:4; 1பே 5:5
இதையும் பாருங்கள்: நீதி 29:23; ஏசா 2:11, 12, 16
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 26:3-5, 16-21—உசியா ராஜாவுக்கு ஆணவம் தலைக்கேறியதால் கடவுளுடைய சட்டத்தை மீறினார்; கண்டிக்கப்பட்டபோது பயங்கரமாகக் கோபப்பட்டார்; அதனால், கடவுள் அவரைத் தொழுநோயால் தண்டித்தார்
-
லூ 18:9-14—பெருமைபிடித்தவர்களின் ஜெபத்தையும் தாழ்மையானவர்களின் ஜெபத்தையும் யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதை விளக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்
-
மனத்தாழ்மையோடும் உண்மையோடும் ஒருவர் மனம் திருந்தும்போது யெகோவா என்ன செய்கிறார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 12:5-7—ரெகொபெயாம் ராஜாவும் யூதாவின் அதிகாரிகளும் யெகோவாவின் முடிவைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு மனம் திருந்தினார்கள், அதனால் யெகோவா அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்
-
2நா 32:24-26—நல்ல ராஜாவான எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்துவிட்டது; ஆனால், அவர் மனம் திருந்தி தாழ்மையாக நடந்துகொண்டபோது யெகோவா அவரை மன்னித்தார்
-
மனத்தாழ்மை காட்டுவது, மற்றவர்களோடு இருக்கும் நம் பந்தத்தை எப்படிப் பலப்படுத்தும்?
எபே 4:1, 2; பிலி 2:3; கொலோ 3:12, 13
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 33:3, 4—முன்பு தன்மேல் கோபமாக இருந்த தன் அண்ணன் ஏசாவைப் பார்த்தபோது யாக்கோபு ரொம்பவே மனத்தாழ்மையாக நடந்துகொண்டார்; அதனால், இரண்டு பேரும் சமாதானமானார்கள்
-
நியா 8:1-3—எப்பிராயீம் வீரர்கள் தன்னைவிட மேலானவர்கள் என்று கிதியோன் சொன்னதால் அவர்களுடைய கோபம் தணிந்தது, அதற்குமேல் அவர்கள் சண்டை போடவில்லை
-
மனத்தாழ்மை காட்டுவது முக்கியம் என்பதை இயேசு எப்படிக் கற்றுக்கொடுத்தார்?
மத் 18:1-5; 23:11, 12; மாற் 10:41-45
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஏசா 53:7; பிலி 2:7, 8—தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது போலவே, இந்தப் பூமிக்கு வரும் நியமிப்பை இயேசு மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார்; அவமானப்பட்டும் வேதனைப்பட்டும் சாவதற்குக்கூடத் தயாராக இருந்தார்
-
லூ 14:7-11—விருந்தில் முக்கியமான இடங்களில் உட்கார விருந்தினர்கள் விரும்புவதை உதாரணமாகச் சொல்லி, மனத்தாழ்மை காட்டுவதால் வரும் நன்மையை இயேசு விளக்கினார்
-
யோவா 13:3-17—ஒரு அடிமை செய்ய வேண்டிய வேலையைச் செய்வதன் மூலம், அதாவது அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம், மனத்தாழ்மையோடு இருக்க இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுத்தந்தார்
-
நம்மையும் மற்றவர்களையும் யெகோவா பார்ப்பதுபோல் பார்ப்பது, மனத்தாழ்மையைக் காட்ட நமக்கு எப்படி உதவும்?
போலியாகத் தாழ்மை காட்டுவதில் ஏன் பிரயோஜனமே இல்லை?