பாடல் 157
பூமியெங்கும் நிம்மதி!
1. அலை மோதுகின்ற
ஓர் பூமியிலே,
அமைதி புறாக்கள் நாமே!
விரைவில் இதோ .. .
சிறகை விரிப்போம்
சுதந்திர வானத்திலே!
(பல்லவி)
புது வானத்தின் கீழ்
புன்னகை தேசம்
அமைதி கொஞ்சுதே!
நதியின் அலைபோல்
நம் சமாதானம்!
ஆஹா, பூமி எங்கும்
நிம்மதி!
2. எல்லைகள் இல்லாத
ஓர் உலகம்,
இல்லை பயம் நெஞ்சத்திலே!
இனி காட்டிலே
தனியாய் தூங்கலாம்,
தென்றல் காற்றின் தாலாட்டிலே!
(பல்லவி)
புது வானத்தின் கீழ்
புன்னகை தேசம்
அமைதி கொஞ்சுதே!
நதியின் அலைபோல்
நம் சமாதானம்!
ஆஹா, பூமி எங்கும்
நிம்மதி!
(பல்லவி)
புது வானத்தின் கீழ்
புன்னகை தேசம்
அமைதி கொஞ்சுதே!
நதியின் அலைபோல்
நம் சமாதானம்!
ஆஹா, பூமி எங்கும்
(பல்லவி)
புது வானத்தின் கீழ்
புன்னகை தேசம்
அமைதி கொஞ்சுதே!
நதியின் அலைபோல்
நம் சமாதானம்!
ஆஹா, பூமி எங்கும்
நிம்மதி!
நிம்மதி!
(பாருங்கள்: சங். 72:1-7; ஏசா. 2:4; ரோ. 16:20)