Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறுபடியும் சந்திப்பது

பாடம் 7

விடாமுயற்சி

விடாமுயற்சி

நியமம்: “அவர்கள் . . . இடைவிடாமல் கற்பித்து, கிறிஸ்துவாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்துவந்தார்கள்.”—அப். 5:42.

பவுல் என்ன செய்தார்?

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது அப்போஸ்தலர் 19:8-10-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. ஒருசிலர் எதிர்த்தாலும், ஆர்வம் காட்டிய மற்றவர்களுக்கு பவுல் எப்படித் தொடர்ந்து உதவி செய்தார்?

  2.  ஆ. ஆர்வம் காட்டியவர்களுக்கு சொல்லித்தர பவுல் எவ்வளவு அடிக்கடி அவர்களைப் போய்ப் பார்த்தார்? எவ்வளவு காலத்துக்கு இப்படிச் செய்தார்?

பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. மறுசந்திப்புகளை நன்றாகச் செய்வதற்கும் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கும், நம்முடைய நேரத்தைச் செலவு செய்ய வேண்டும், முயற்சியும் எடுக்க வேண்டும்.

பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. ஆர்வம் காட்டியவருடைய வசதிக்கு ஏற்ற மாதிரி உங்கள் அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். இப்படி யோசித்துப் பாருங்கள்: ‘எங்கே, எப்போது போய்ப் பார்ப்பது அவருக்கு வசதியாக இருக்கும்?’ அந்த நேரம் உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டாலும், அவரைப் போய்ப் பார்ப்பதற்குத் தயாராக இருங்கள்.

4. மறுபடியும் எப்போது சந்திக்கலாம் என்று கேளுங்கள். ஒவ்வொரு தடவை பேசி முடிக்கும்போதும், அடுத்து அவரை எப்போது சந்திக்கலாம் என்று கலந்துபேசி முடிவு செய்யுங்கள். சொன்ன நேரத்துக்கு சொன்னபடி போங்கள்.

5. நம்பிக்கையோடு இருங்கள். ஒருவரை வீட்டில் பார்க்கவே முடியாமல் இருக்கலாம். அல்லது அவர் எப்போதுமே வேலையாக இருக்கலாம். அதற்காக, அவருக்கு ஆர்வமே இல்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிடாதீர்கள். (1 கொ. 13:4, 7) அவரை மறுபடியும் போய்ப் பார்க்க விடாமுயற்சி செய்யுங்கள். அதேசமயம், உங்கள் நேரம் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.—1 கொ. 9:26.

இதையும் பாருங்கள்