Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரை ஒரு மந்திரச் சொல்லாகப் பயன்படுத்துகிறார்களா?

தங்களை அற்புதமாய்ப் பாதுகாக்கும் சக்தி ஒரு பொருளுக்கோ சின்னத்திற்கோ இருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள்; ஆனால், கடவுளுடைய பெயருக்கு மந்திரச் சக்தி இருப்பதாக அவருடைய மக்கள் நினைப்பதில்லை. அவர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்து, அவருடைய சித்தத்தைச் செய்ய முயலுகிறார்கள்; இவ்வாறு, அவருடைய பெயரில் அடைக்கலம் புகுகிறார்கள். (செப். 3:12, 13, NW )—1/15, பக்கங்கள் 5-6.

• யெகோவா ஏன் சவுல் ராஜாவை நிராகரித்தார்?

பலி செலுத்தக் கடவுளுடைய தீர்க்கதரிசி வரும்வரை சவுல் காத்திருக்க வேண்டியிருந்தது; அவரோ காத்திருக்காமல் தானே பலி செலுத்தினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், கடவுளுடைய மக்களுக்கு எதிரிகளாக இருந்த ஜனத்தைத் துடைத்தழிக்கும்படி கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனார்.—2/15, பக்கங்கள் 22-23.

• நாம் அக்கிரமத்தை வெறுப்பதை எப்படிக் காட்டுவோம்?

மிதமிஞ்சி மதுபானம் குடிக்க மாட்டோம், மாயமந்திரப் பழக்கங்களை விட்டொழிப்போம், ஒழுக்கக்கேடு பற்றிய இயேசுவின் எச்சரிப்புக்குச் செவிசாய்ப்போம். உதாரணத்திற்கு, ஆபாசப் படங்களைப் பார்க்க மாட்டோம், அதன் கற்பனை உலகில் மிதக்க மாட்டோம். (மத். 5:27, 28) அதோடு, சபை நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் கூட்டுறவு கொள்ள மாட்டோம்.—2/15, பக்கங்கள் 29-32.

• எரேமியா எப்படி ‘தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், தன் வேர்களை விடுகிறதுமான’ மரத்தைப் போலிருந்தார்? (எரே. 17:7, 8)

அவர் எப்போதும் கனிகொடுத்துக் கொண்டிருந்தார்; கேலி கிண்டல் செய்கிறவர்கள் பக்கம் சாயவில்லை. மாறாக, ஜீவ தண்ணீரின் ஊற்றாய் இருக்கிற யெகோவாவைச் சார்ந்திருந்தார், அவர் சொன்ன எல்லாவற்றையும் இருதயத்தில் பதித்தார்.—3/15, பக்கம் 14.