Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவின் மக்களுக்காகக் கடினமாக உழைக்கும் மேய்ப்பர்கள்

யெகோவாவின் மக்களுக்காகக் கடினமாக உழைக்கும் மேய்ப்பர்கள்

இன்றைக்கு நிறைய மக்களுக்கு அதிகாரத்தில் இருக்கிறவர்கள்மேல் ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால், காலங்காலமாகவே மனிதர்கள் தங்களுடைய அதிகாரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். (மீ 7:3) ஆனால், சபையில் இருக்கிற மூப்பர்கள் யெகோவாவின் மக்களுடைய நன்மைக்காக தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதற்கு, நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!—எஸ்தர் 10:3; மத் 20:25, 26.

இன்று உலகத்தில் அதிகாரத்தில் இருக்கிறவர்களைப் போல் இல்லாமல், யெகோவாமேலும் அவருடைய மக்கள்மேலும் இருக்கிற அன்பால் மூப்பர்கள் கண்காணிகளாக சேவை செய்கிறார்கள். (யோவா 21:16; 1பே 5:1-3) இயேசுவின் வழிநடத்துதலின்கீழ், இந்த மூப்பர்கள் சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக உணர்வதற்கும், அவரோடு நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுகிறார்கள். யாருக்காவது ஆன்மீக உதவி தேவைப்பட்டால் உடனே ஓடோடிப்போய் உதவுகிறார்கள். மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ பேரழிவு நடந்தாலோ தங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், உங்கள் சபையில் இருக்கிற மூப்பர்களிடம் அதை கேட்க தயங்காதீர்கள்!—யாக் 5:14.

அக்கறையாகப் பார்த்துக்கொள்ளும் மேய்ப்பர்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • மூப்பர்கள் செய்த உதவியால் மரியானா எப்படி நன்மையடைந்தார்?

  • மூப்பர்கள் செய்த உதவியால் எலியாஸ் எப்படி நன்மையடைந்தார்?

  • இந்த அனுபவங்களைப் பார்த்த பிறகு, மூப்பர்கள் செய்யும் வேலைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?