Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?

உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?

நீங்கள் செய்கிற ஜெபத்தைக் கடவுள் உண்மையிலேயே கேட்கிறார் என்று நினைக்கிறீர்களா?

பைபிள் என்ன சொல்கிறது?

  • கடவுள் கேட்கிறார். ‘யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். . . . உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்கிறார்’ என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—சங்கீதம் 145:18, 19.

  • தன்னிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்” என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—பிலிப்பியர் 4:6.

  • கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். நாம் படுகிற வேதனையையும் கவலையையும் பற்றி யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அவர் நமக்கு உதவ ஆசையாக இருக்கிறார். “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 5:7.