மனநோயே இல்லாத ஒரு காலம்!
மனநோயை சமாளிக்க தேவையான ஆறுதலையும் நல்ல ஆலோசனைகளையும் கடவுள் பைபிள் மூலமாக கொடுக்கிறார்.
ஆனால் அதுமட்டுமல்ல, நமக்கு மனநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிற எல்லாவற்றையும் முழுமையாக நீக்கப்போவதாக கடவுள் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.
அந்த சத்தியத்தை கடவுள் நிறைவேற்றும்போது, மனதில் இருக்கிற ஆறாத ரணங்கள் ஆறிவிடும். வேதனையான அனுபவங்களும் கசப்பான நினைவுகளும் “யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.”—ஏசாயா 65:17.
மனதுக்கு ஆறுதல் கொடுக்கிற இந்த வாக்குறுதியை கடவுள் எப்போது நிறைவேற்றுவார், எப்படி நிறைவேற்றுவார் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? இதை பற்றி விளக்குவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்!