Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு ப்ராஜெக்ட்

நல்ல தீர்மானங்களை எடுங்கள்!

நல்ல தீர்மானங்களை எடுங்கள்!

ஏசாவும் யாக்கோபும் நல்ல தீர்மானங்களை எடுத்தார்களா என்பதைத் தெரிந்துகொள்ள ஆதியாகமம் 25:29-34-ஐ வாசியுங்கள்.

வசனத்தின் பின்னணியை ஆராய்ச்சி செய்யுங்கள். இதற்கு முன்பு என்ன நடந்தது? (ஆதி. 25:20-28) இதற்கு பின்பு என்ன நடந்தது?—ஆதி. 27:1-46.

முக்கியமான விவரங்களை ஆராய்ச்சி செய்யுங்கள். அந்தக் காலத்தில், முதல் மகனுக்கு என்னென்ன உரிமைகளும் பொறுப்புகளும் இருந்தன?—ஆதி. 18:18, 19; w10-E 5/1 13.

  • ஒருவர் மேசியாவின் மூதாதையாக இருப்பதற்கு மூத்த மகனாக இருக்க வேண்டிய அவசியம் இருந்ததா? (w17.12 14-15)

கற்றுக்கொண்டதை யோசித்துப் பாருங்கள், வாழ்க்கையில் பின்பற்றுங்கள். ஏசாவைவிட யாக்கோபு ஏன் மூத்த மகன் உரிமையை முக்கியமாக நினைத்தார்? (எபி. 12:16, 17; w03 10/15 28-29) இந்த இரண்டு பேரைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார், ஏன்? (மல். 1:2, 3) நல்ல தீர்மானங்களை எடுக்க ஏசா என்ன செய்திருக்கலாம்?

  • உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒரு வாரத்தில் நான் செய்யப்போகும் வேலைகளைத் திட்டமிடும்போது, வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறேனா? குடும்ப வழிபாட்டுக்காக நேரம் ஒதுக்குகிறேனா?’