Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 4

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்?

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்?

காங்கோ (கின்ஷாசா)

ருவாண்டா

சங்கீதம் 69:31-ல் யெகோவாவுடைய பெயர் இருந்ததை சிம்மாக்கஸ் துண்டில் பார்க்கலாம். இது மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது

நாங்கள் பல வருஷங்களாக மற்றவர்கள் மொழிபெயர்த்த பைபிள்களை பயன்படுத்தினோம். அதோடு, அந்த பைபிள்களை நாங்களே அச்சடித்து எல்லா ஜனங்களுக்கும் கொடுத்தோம். எல்லாரும் ‘திருத்தமான அறிவை பெற வேண்டும்’ என்று கடவுள் விரும்புகிறார். அதனால், ஜனங்கள் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்தில் ஒரு பைபிளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். (1 தீமோத்தேயு 2:3, 4) அதற்காக, சாதாரண மொழிநடையில் பைபிளை மொழிபெயர்த்தோம். 1950-லிருந்து அதை ஒவ்வொரு பாகமாக வெளியிட ஆரம்பித்தோம். அதுதான் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள். இந்த பைபிள் திருத்தமானது, 130-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது.

புரிந்துகொள்ள சுலபமாக இருக்கிற பைபிள் தேவைப்பட்டது. காலம் மாற மாற மொழியும் மாறிக்கொண்டே வருகிறது. இன்று இருக்கிற நிறைய பைபிளில், ஜனங்களுக்குப் புரியாத வார்த்தைகளும் அவர்கள் பயன்படுத்தாத வார்த்தைகளும்தான் இருக்கின்றன. அதனால்தான், புரிந்துகொள்வதற்கு சுலபமாக இருக்கிற பைபிள் தேவைப்பட்டது. அதோடு, ரொம்ப ரொம்ப பழைய பைபிள் சுருள்கள் (அசலை பார்த்து எழுதப்பட்ட நகல்கள்) இப்போது கிடைத்திருக்கின்றன. அதையெல்லாம் படித்த பிறகு, பைபிள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த எபிரெயு, அரமேயிக், கிரேக்கு மொழிகளை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. பைபிளை நன்றாக மொழிபெயர்க்க இது உதவியாக இருந்திருக்கிறது.

அர்த்தம் மாறாமல் இருக்கிற பைபிள் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது. கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்க்கிறவர்கள் அவர்களுடைய இஷ்டத்துக்கு மொழிபெயர்க்கக் கூடாது. பைபிளில் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்க வேண்டும். ஆனால், பைபிளை மொழிபெயர்த்த நிறையப் பேர் கடவுளுடைய பெயரையே எடுத்துவிட்டார்கள். அதனால், யெகோவா என்ற பெயரே நிறைய பைபிளில் இல்லை.

கடவுளுக்குப் புகழ் சேர்க்கிற ஒரு பைபிள் தேவைப்பட்டது. கடவுளுடைய உதவியோடுதான் மனிதர்கள் பைபிளை எழுதினார்கள். (2 சாமுவேல் 23:2) பழங்காலத்து பைபிள் சுருள்களில் 7,000 தடவைக்குமேல் யெகோவா என்ற கடவுளுடைய பெயர் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணத்தை கீழே இருக்கிற படத்தில் பார்க்கலாம். (சங்கீதம் 83:18) புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் 7,000 தடவைக்குமேல் யெகோவாவுடைய பெயர் இருக்கிறது. ரொம்ப வருஷம் ஆராய்ச்சி செய்து இந்த பைபிளைத் தயாரித்திருக்கிறோம். இந்த பைபிளைப் படிக்கும்போது கடவுள் சொன்னதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது, படிப்பதற்கும் நன்றாக இருக்கிறது. ஒருவேளை, இந்த பைபிள் உங்கள் மொழியில் இல்லை என்றாலும், உங்களிடம் இருக்கிற பைபிளை தினமும் வாசியுங்கள்.—யோசுவா 1:8; சங்கீதம் 1:2, 3.

  • நாங்கள் ஏன் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைத் தயாரித்தோம்?

  • கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்கள் தினமும் என்ன செய்ய வேண்டும்?