சங்கீதம் 49:1-20
இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம்.
49 மக்களே, எல்லாரும் இதைக் கேளுங்கள்.
உலக ஜனங்களே, எல்லாரும் கவனியுங்கள்.
2 சிறியவர்களே, பெரியவர்களே,ஏழைகளே, பணக்காரர்களே, எல்லாரும் கேளுங்கள்.
3 என் வாய் ஞானமான வார்த்தைகளைப் பேசும்.என் இதயம் ஆழமான* விஷயங்களைத் தியானிக்கும்.+
4 பழமொழியை நான் காதுகொடுத்துக் கேட்பேன்.யாழ் இசைத்துக்கொண்டே என் விடுகதையை விளக்குவேன்.
5 கொடிய காலங்களில் நான் எதற்காகப் பயப்பட வேண்டும்?+என்னைக் கவிழ்க்க நினைக்கிறவர்களின் அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதுநான் ஏன் நடுங்க வேண்டும்?
6 சொத்துகள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களோ,+சொத்துகளைக் குவித்து வைத்திருப்பதாகப் பெருமை பேசுகிறவர்களோ,+
7 யாராக இருந்தாலும், இன்னொருவனின் உயிரை மீட்கவே முடியாது.அவனுக்காகக் கடவுளுக்கு மீட்புவிலையைக் கொடுக்கவும் முடியாது.+
8 (அவர்களுடைய உயிருக்கான மீட்புவிலை ரொம்பவே பெரிது.*அதை அவர்களால் கொடுக்கவே முடியாது.)
9 சவக்குழிக்குள் போகாமல் என்றென்றும் வாழும்படி ஒருவனை யாராலும் மீட்க முடியாது.+
10 ஞானமுள்ளவர்கள்கூட செத்துப்போவதை அவர்கள் பார்க்கிறார்கள்.முட்டாள்களும் புத்தி இல்லாதவர்களும் அழிந்துபோகிறார்கள்.+அவர்கள் தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்குத்தான் விட்டுவிட்டுப் போக வேண்டியிருக்கிறது.+
11 ஆனாலும், தங்களுடைய வீடுகள் காலாகாலத்துக்கு இருக்க வேண்டுமென்றும்,தங்களுடைய கூடாரங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்க வேண்டுமென்றுமே ஆசைப்படுகிறார்கள்.
அதனால், தங்களுடைய நிலபுலன்களுக்குத் தங்களுடைய பெயரை வைத்துக்கொள்கிறார்கள்.
12 ஆனால், மனிதனுக்கு எவ்வளவுதான் மதிப்பு மரியாதை இருந்தாலும்,அவனால் நிலைத்திருக்க முடியாது.+அழிந்துபோகிற மிருகங்களைப் போலத்தான் அவனும் இருக்கிறான்.+
13 முட்டாள்களுக்கும்,+ அவர்களுடைய வழியில் போகிறவர்களுக்கும்,அவர்களுடைய வீண் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் அதே முடிவுதான் வரும். (சேலா)
14 வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிற செம்மறியாடுகள்போல்
அவர்கள் கல்லறைக்குக் கொண்டுபோகப்படுகிறார்கள்.இனி சாவுதான் அவர்களுடைய மேய்ப்பன்.
நேர்மையானவர்கள் விடியற்காலையில் அவர்களை ஆளுவார்கள்.+அவர்கள் சுவடு தெரியாமல் அழிந்துபோவார்கள்;+
இனி மாளிகையில் குடியிருக்காமல் கல்லறையில்தான்+ குடியிருப்பார்கள்.+
15 ஆனால், கல்லறையின் கோரப் பிடியிலிருந்து கடவுள் என்னை விடுவிப்பார்.+அவர் என்னைக் கைப்பிடித்துத் தூக்கிவிடுவார். (சேலா)
16 ஒருவன் பணக்காரனாவதைப் பார்த்தோ,அவனுடைய வீடு ஆடம்பரமாகிக்கொண்டே போவதைப் பார்த்தோ நீ பயப்படாதே.
17 ஏனென்றால், சாகும்போது அவனால் எதையுமே கொண்டுபோக முடியாது.+அவனுடைய சொத்துப்பத்துகள் எதுவும் அவனோடு போகாது.+
18 உயிரோடு இருக்கும்போது அவன் தன்னையே பாராட்டிக்கொள்கிறான்.+
(ஒருவனுக்கு வசதிவாய்ப்புகள் பெருகும்போது ஜனங்கள் அவனைப் புகழ்வார்கள்.)+
19 ஆனால் கடைசியில், தன்னுடைய முன்னோர்களைப் போலவே அவன் செத்துப்போகிறான்.
அவர்கள் யாரும் இனி வெளிச்சத்தைப் பார்க்கவே மாட்டார்கள்.
20 ஒருவன் இதைப் புரிந்துகொள்ளாவிட்டால்,அவனுக்கு எவ்வளவுதான் மதிப்பு மரியாதை இருந்தாலும்,+
அழிந்துபோகிற மிருகங்களைப் போலத்தான் இருப்பான்.