Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 150

மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

(செப்பனியா 2:3)

  1. 1. தேவ மகன் வர

    தேசங்கள் எதிர்க்குமோ?

    தூசெல்லாம் சேர்ந்து காற்றினை,

    கைகோர்த்து வென்றிடுமோ?

    இல்லாமல் போகுமே!

    அந்நேரம் நெருங்குதே!

    தேசங்கள் காலம்தான் முடிந்தே,

    விண்ணாட்சி தோன்றியதே!

    (பல்லவி)

    தேடுவோமே தேவனையே,

    நாடுவோமே அவரையே!

    நீதியைத் தேடி, 

    உண்மையை நாடி,

    தேவனின் பக்கம் நிற்போமே;

    மாவல்ல தேவன் கையாலே

    மீட்பைக் காண்போமே!

  2. 2. நற்செய்தி சொல்கிறோம்

    நல் வாய்ப்பு தருகிறோம்

    வேண்டும், வேண்டாம் என்பதெல்லாம்

    கேட்போரின் கைகளில்தான்.

    சோதனைத் தீயிலே

    நாம் சோர்ந்திட வேண்டுமா?

    தேவன்தான் நம் அடைக்கலமே,

    கேட்பார் நம் விண்ணப்பமே!

    (பல்லவி)

    தேடுவோமே தேவனையே,

    நாடுவோமே அவரையே!

    நீதியைத் தேடி, 

    உண்மையை நாடி,

    தேவனின் பக்கம் நிற்போமே;

    மாவல்ல தேவன் கையாலே

    மீட்பைக் காண்போமே!