பாடல் 21
கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!
-
1. ராஜாவாக ஏசு ஆள
பூமியெங்கும் ஆனந்தம்.
மகனின் நல்லாட்சி பார்த்து
மகிழ்வார் யெகோவாவே.
(பல்லவி)
விண்ணிலே பொன்னான ஆட்சி
அதற்கே நம்மை தந்தோம்.
அதைத் தானே காலம் எல்லாம்
முதலாக நாம் வைத்தோம்.
-
2. தேவைக்காக ஓடி ஓடி
நாட்கள் தேய வேண்டாமே.
அப்பா நம்மை பார்த்துக்கொள்வார்
கவலைதான் வேண்டாமே.
(பல்லவி)
விண்ணிலே பொன்னான ஆட்சி
அதற்கே நம்மை தந்தோம்.
அதைத் தானே காலம் எல்லாம்
முதலாக நாம் வைத்தோம்.
-
3. நல்ல செய்தி எங்கும் சொல்வோம்
காலம் இன்னும் கொஞ்சம்தான்!
உண்மை தேடும் நெஞ்சம் எல்லாம்
வந்து சேரும் இங்கேதான்!
(பல்லவி)
விண்ணிலே பொன்னான ஆட்சி
அதற்கே நம்மை தந்தோம்.
அதைத் தானே காலம் எல்லாம்
முதலாக நாம் வைத்தோம்.
(பாருங்கள்: சங். 27:14; மத். 6:34; 10:11, 13; 1 பே. 1:21.)