Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Chris McGrath/Getty Images

போர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

போர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

 இந்த உலகம் இன்றுவரை போர்களின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது. போர்களினால் எவ்வளவு அழிவு! எவ்வளவு வலி!! எவ்வளவு வேதனை!!! இந்த அறிக்கைகளைக் கவனியுங்கள்:

  •    “1994-லிருந்து, வேறெந்த வருஷத்தையும்விட போன வருஷத்தில்தான் போர்களினால் நிறைய பேர் இறந்துபோனார்கள், அதுவும் முக்கியமாக எத்தியோப்பியாவிலும் உக்ரைனிலும்!”—சமாதான ஆராய்ச்சி நிறுவனம் ஆஸ்லோ, ஜூன் 7, 2023.

  •    “2022-ல், உக்ரைனைப் போலவே மற்ற இடங்களிலும் போர்கள் தீவிரமாகிவிட்டன. போன வருஷம், அரசியல் வன்முறை உலகெங்கும் 27 சதவீதம் அதிகமாகிவிட்டது. அதனால் கிட்டத்தட்ட 170 கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.”—ஆயுத மோதல் இடம் & நிகழ்வு தரவு திட்டம் (ACLED), பிப்ரவரி 8, 2023.

 பைபிள் நம்பிக்கை தருகிறது. “பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது” என்று அது சொல்கிறது. (தானியேல் 2:44) அந்த ராஜ்யத்தில், அதாவது அரசாங்கத்தில், கடவுள் ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்.’—சங்கீதம் 46:9.