Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புத்தம்புது பூமி வேண்டும்!

புத்தம்புது பூமி வேண்டும்!

“பிரச்சினைகள் நிறைந்த ஒரு உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ கோத்ரெஸ் சொன்னார். இதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் தானே?

செய்திகளில் முழுக்க முழுக்க இதுபோன்ற வேதனைதரும் விஷயங்கள்தான் வருகின்றன.

  • நோய்கள், பெருந்தொற்றுகள்

  • இயற்கைப் பேரழிவுகள்

  • வறுமை, பசி பட்டினி

  • பூமி மாசுபடுதல், வெப்பமாகுதல்

  • சட்டவிரோதச் செயல்கள், வன்முறை

  • போர்கள்

நமக்குப் புத்தம்புது பூமி வேண்டும் என்பதை இவை தெளிவாகக் காட்டுகின்றன. அந்தப் பூமி இப்படி இருக்க வேண்டும்...

  • முழுமையான ஆரோக்கியம்

  • எல்லாருக்கும் பாதுகாப்பு

  • ஏராளமான உணவு

  • நல்ல சுற்றுச்சூழல்

  • எல்லாருக்கும் நீதி

  • உலகெங்கும் சமாதானம்

புத்தம்புது பூமி என்று எதைப் பற்றிச் சொல்கிறோம்?

இப்போது நாம் வாழ்கிற இந்தப் பூமிக்கு என்ன நடக்கும்?

புத்தம்புது பூமியில் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கும் இவற்றோடு சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளுக்கும் பைபிள் தரும் ஆறுதலான பதில்களை இந்த காவற்கோபுர பத்திரிகையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்வீர்கள்.