இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை?
மரணம் நம் யாரையுமே விட்டுவைப்பதில்லை. ஆனால், மரணம் நம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறதா? இறந்தவர்கள் இறந்தவர்கள்தானா? அவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?
பைபிள் சொல்லும் பதில்:
இறந்தவர்களைக் கடவுள் மறக்கவில்லை
“நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் . . . வெளியே வருவார்கள்.”—யோவான் 5:28.
இறந்தவர்களைக் கடவுள் ஞாபகம் வைத்திருக்கிறார். அவருடைய ஞாபகத்தில் இருக்கிற எல்லாருமே மறுபடியும் உயிரோடு வருவார்கள்.
இறந்தவர்கள் இந்தப் பூமியில் உயிரோடு வருவார்கள்
“நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”—அப்போஸ்தலர் 24:15.
இறந்துபோன கோடிக்கணக்கானவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; அவர்கள் அளவில்லாத சமாதானத்தோடு என்றென்றும் வாழ்வார்கள்.
உறுதியாக நம்பலாம்
“நட்சத்திரங்களை [கடவுள்] எண்ணுகிறார். அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்.”—சங்கீதம் 147:4.
எல்லா நட்சத்திரங்களுடைய பெயர்களையும் ஞாபகம் வைத்திருக்கும் கடவுளால், தான் உயிரோடு எழுப்பப்போகிறவர்களைச் சுலபமாக ஞாபகம் வைத்திருக்க முடியும்.