Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை?

இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை?

மரணம் நம் யாரையுமே விட்டுவைப்பதில்லை. ஆனால், மரணம் நம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறதா? இறந்தவர்கள் இறந்தவர்கள்தானா? அவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

பைபிள் சொல்லும் பதில்:

இறந்தவர்களைக் கடவுள் மறக்கவில்லை

“நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் . . . வெளியே வருவார்கள்.”​—யோவான் 5:28.

இறந்தவர்களைக் கடவுள் ஞாபகம் வைத்திருக்கிறார். அவருடைய ஞாபகத்தில் இருக்கிற எல்லாருமே மறுபடியும் உயிரோடு வருவார்கள்.

இறந்தவர்கள் இந்தப் பூமியில் உயிரோடு வருவார்கள்

“நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”​—அப்போஸ்தலர் 24:15.

இறந்துபோன கோடிக்கணக்கானவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; அவர்கள் அளவில்லாத சமாதானத்தோடு என்றென்றும் வாழ்வார்கள்.

உறுதியாக நம்பலாம்

“நட்சத்திரங்களை [கடவுள்] எண்ணுகிறார். அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்.”​—சங்கீதம் 147:4.

எல்லா நட்சத்திரங்களுடைய பெயர்களையும் ஞாபகம் வைத்திருக்கும் கடவுளால், தான் உயிரோடு எழுப்பப்போகிறவர்களைச் சுலபமாக ஞாபகம் வைத்திருக்க முடியும்.