Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்?

யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்?

இயேசு ஒரு தடவை, “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று சொன்னார். (அப். 20:35) இந்த அடிப்படையான உண்மை, யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்குப் பொருந்துகிறது. எப்படி? யெகோவா நமக்கு ஏராளமான பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்; அவை நமக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. ஆனால், யெகோவாவுக்கு நாம் பரிசு கொடுக்கும்போது, அதைவிட அதிக சந்தோஷம் நமக்குக் கிடைக்கும். அப்படியென்றால், யெகோவாவுக்கு என்ன பரிசை நம்மால் கொடுக்க முடியும்? ‘உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களை . . . கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்து’ என்று நீதிமொழிகள் 3:9 சொல்கிறது. நம்முடைய ‘மதிப்புமிக்க பொருள்களில்’ நம்முடைய நேரம், திறமைகள், பலம், பொருள் செல்வங்கள் ஆகியவை அடங்குகின்றன. உண்மை வணக்கம் தொடர்ந்து முன்னேற நம்மிடம் இருக்கிற மதிப்புமிக்க பொருள்களைப் பயன்படுத்தும்போது, நாம் யெகோவாவுக்குப் பரிசு கொடுக்கிறோம் என்று அர்த்தம்; அது நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.

நம்முடைய பொருள் செல்வங்களை யெகோவாவுக்குப் பரிசாகக் கொடுக்கும் விஷயத்தை லேசாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? கொரிந்து சபையாரிடம் அப்போஸ்தலன் பவுல், “ஏதாவது சேமித்து வையுங்கள்” என்று சொன்னார். (1 கொ. 16:2) உங்களுடைய பகுதியில் யெகோவாவுக்கு நன்கொடை கொடுப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? கீழே இருக்கிற பெட்டியைத் தயவு செய்து பாருங்கள்.

எல்லா நாடுகளிலும் ஆன்லைன் மூலம் நன்கொடை கொடுக்க முடியாது. அதனால், மற்ற வழிகளில் எப்படி நன்கொடை கொடுக்கலாம் என்று தெரிந்துகொள்ள “நன்கொடைகள்” என்ற வெப் பேஜை பாருங்கள். சில நாடுகளில், “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற ஒரு கட்டுரை இருக்கிறது. நன்கொடைகள் சம்பந்தமான கேள்விகளுக்கு அது பதில் தருகிறது.