Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் போதனை

மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே மன்னிப்பு

மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே மன்னிப்பு

இயேசு மீட்புவிலையாக கொடுத்த தன்னுடைய இரத்தத்தின் மூலம் மட்டும்தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும். (எபே. 1:7) ஆனாலும், கடவுள், முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைச்  சகித்துக்கொண்டு மன்னித்தார், அதாவது இயேசு மீட்புவிலையைக் கொடுப்பதற்கு முன்பே மன்னித்தார் என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 3:25) நீதியாக நடக்கும் யெகோவாவால், மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே எப்படி மன்னிக்க முடியும்?

யெகோவா தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களை மீட்பதற்காக ஒரு ‘சந்ததியை’ அனுப்பப்போவதாக வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதி. 3:15; 22:18) அவரைப் பொறுத்தவரைக்கும், அந்த வாக்குறுதியைக் கொடுத்தபோதே மீட்புவிலை கொடுக்கப்பட்டதுபோல் இருந்தது. சரியான சமயத்தில் தன்னுடைய ஒரே மகன் மனப்பூர்வமாக மீட்புவிலையைக் கொடுப்பார் என்பதில் கடவுளுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. (கலா. 4:4; எபி. 10:7-10) இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய பிரதிநிதியாக பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். மீட்புவிலையைக் கொடுப்பதற்கு முன்பே அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது. அதனால்தான், சீக்கிரத்தில் தான் கொடுக்கவிருந்த மீட்புவிலையின் அடிப்படையில், விசுவாசம் வைக்கிறவர்களுடைய பாவங்களை அவர் மன்னித்தார்.—மத். 9:2-6.