Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நினைவில் வைக்க வேண்டிய நாள்

நினைவில் வைக்க வேண்டிய நாள்

ஏப்ரல் 19, 2000

நினைவில் வைக்க வேண்டிய நாள்

ம் மரிப்பதற்கு முந்தின நாள் மாலை, தம்முடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பை இயேசு ஆரம்பித்து வைத்தார். அது எளிமையான ஓர் ஆசரிப்பு. அந்த ஆசரிப்பின்போது தம் அப்போஸ்தலர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19.

இந்த வருடாந்தர ஆசரிப்பு, இந்த வருடம் ஏப்ரல் 19, புதன்கிழமை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அனுசரிக்கப்படும்.

இயேசு கேட்டுக்கொண்ட விதத்தில் இது அனுசரிக்கப்பட வேண்டும். அதன் காரணமாக, இந்த விசேஷித்த இரவில் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒன்றுகூடுவர். இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக அவர்களோடு சேர்ந்துகொள்ளும்படி உங்களை உள்ளன்போடு அழைக்கிறோம். கூட்டம் நடத்தப்படும் இடத்தையும் சரியான நேரத்தையும் தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.