Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கோர் அழைப்பு—நீங்கள் வருவீர்களா?

உங்களுக்கோர் அழைப்பு—நீங்கள் வருவீர்களா?

உங்களுக்கோர் அழைப்பு​—நீங்கள் வருவீர்களா?

எதற்கு அழைப்பு? யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு வருடமும் கூடிவரும் மிக முக்கியமான கூட்டத்திற்கே. அது கிறிஸ்து ஆரம்பித்து வைத்த கர்த்தருடைய இராப்போஜனத்தின் அடிப்படையில் அவருடைய மரணத்தை நினைவுகூரும் ஆசரிப்பு. “இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது [என்றார்]” என மத்தேயுவின் பதிவு நமக்குச் சொல்கிறது.​—மத்தேயு 26:26-28.

இவ்வார்த்தைகளின் முக்கியத்துவம், இந்த வருடம் மார்ச் 28, வியாழக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஆசரிக்கப்படும் கர்த்தருடைய இராப்போஜனத்தில் விளக்கப்படும். நீங்கள் வருவீர்கள் என நம்புகிறோம். உங்கள் பகுதியில் இக்கூட்டம் நடைபெறும் சரியான நேரத்தையும் இடத்தையும் தயவுசெய்து யெகோவாவின் சாட்சிகளைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். வரும்படி உங்களை மனதார அழைக்கிறோம். (g02 3/8)