Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிர்காலத்திற்கு நம்பகமான வழிகாட்டி

எதிர்காலத்திற்கு நம்பகமான வழிகாட்டி

எதிர்காலத்திற்கு நம்பகமான வழிகாட்டி

எண்சோதிடமும் மற்ற சோதிடங்களும் நம்பகமானவையாக இல்லாததால் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவே முடியாது என அர்த்தமா? இல்லவே இல்லை!

எண்களால் மனிதனின் எதிர்காலத்தைக் கணிக்க முடியாது. ஆனால் “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு” அறிவிக்கிற ‘ஜீவனுள்ள தேவனால்’ அது முடிந்திருக்கிறது. அவர் தமது வார்த்தையாகிய பைபிளில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். (1 தீமோத்தேயு 4:10; ஏசாயா 46:10) எண்சோதிடர்களின் வார்த்தையல்ல, ஜீவனுள்ள தேவனின் வார்த்தையே ‘இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாக’ இருக்கிறது; ஆகவே உங்களைத் தூண்டுவிப்பது எது என்பதையும் உங்களுக்கு உண்மையில் வெற்றியைத் தேடித் தருவது எது என்பதையும் புரிந்துகொள்ள அது உங்களுக்கு உதவும்.​—எபிரெயர் 4:⁠12.

பைபிளின் ஆசிரியராகிய நம் படைப்பாளரால் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க முடியும். ஏனெனில் கடவுள் சர்வ வல்லமை படைத்தவர், எப்போதும் சொன்ன சொல் தவறாதவர். “அதைச் சொன்னேன், . . . அதைச் செய்து முடிப்பேன்” என யெகோவா தேவன் சொன்னார். (ஏசாயா 46:11) இஸ்ரவேலர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச் சென்ற பிறகு யோசுவா இவ்வாறு நம்பிக்கையோடு சொன்னார்: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”​—யோசுவா 21:45; 23:⁠14.

பைபிளில் உள்ள அநேக தீர்க்கதரிசனங்கள் இனிதான் நிறைவேறப்போகின்றன. அவற்றில் சில, பூமியிலிருந்து துன்மார்க்கம் துடைத்தழிக்கப்படுவதையும் பூமி பரதீஸாக மாறுவதையும் முன்னறிவிக்கின்றன. (சங்கீதம் 37:10, 11; நீதிமொழிகள் 2:21, 22) அப்படிப்பட்ட எதிர்காலத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறீர்களா? இந்த பூமியிலுள்ள நிலைமைகளை சீர்படுத்துவதற்குத் தேவையான ஞானமும் வல்லமையும் நம் படைப்பாளருக்கு இருப்பதாக நம்புகிறீர்களா? அப்படியென்றால் பூமியின் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். a

ஆகவே எண்களை வைத்து எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயலுவதற்குப் பதிலாக பைபிளையும் அதன் தீர்க்கதரிசனங்களையும் திருத்தமாக புரிந்துகொள்வதில் இன்று உங்கள் நேரத்தை ஞானமாக செலவழியுங்கள். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி எதிர்காலத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் தயாராக இருக்கிறார்கள். (g02 9/8)

[அடிக்குறிப்பு]