Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நான் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்”

“நான் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்”

“நான் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்”

சென்ற வருடம் ஒரு பெண் இவ்வாறு எழுதினார்: “நான் கேட்டபடி கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற புரோஷர் நேற்று தபாலில் வந்து சேர்ந்தது.” இந்த புரோஷர் பற்றிய இரண்டு விளம்பரங்களை அவர் முன்பு பார்த்திருந்ததை குறிப்பிட்டு இவ்வாறு எழுதினார்: “அந்த விளம்பரங்களை வாசித்த பிறகு எப்போது புரோஷர் கைக்குக் கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருந்தேன், ஏனென்றால் நான் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என புரிந்தது. அது கையில் கிடைத்தவுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். அதில் விளக்கப்பட்டுள்ளவை எல்லாமே நியாயமானவை, அதுவும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.”

கடிதத்தின் முடிவில், “வாசித்த விஷயங்களை உடனடியாக கடைப்பிடிக்க வேண்டுமென மனம் துடிக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32-பக்க சிற்றேட்டை வாசித்து நீங்களும் பயனடைவீர்கள் என நம்புகிறோம். “இயேசு கிறிஸ்து யார்?” என்ற அருமையான பாடம் மட்டுமல்லாமல் “கடவுள் யார்?,” “பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?,” “கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?” போன்ற பாடங்களும் அதில் உள்ளன. இந்தச் சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலை பெற்றுக்கொள்ள விரும்பினால், கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இப்பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g02 9/8)

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.