Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசை”

“யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசை”

“யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசை”

ஜப்பானில் வசிக்கும் மிக்கி என்ற 12 வயது சிறுமி, திருப்தியான வாழ்க்கைக்கு வழி என்ற சிற்றேட்டைப் படித்துவிட்டு பிரசுரிப்போருக்கு எழுதிய கடிதத்தில் இப்படித்தான் தெரிவித்தாள். “‘திருப்தியான வாழ்க்கை’ என்ற வார்த்தைகளை பார்த்ததும் வாழ்க்கையை எப்படி திருப்தியாக்கலாம் என்ற அறிவுரைதான் இதில் இருக்குமென நினைத்தேன். ஆனால் இதை வாசித்த பிறகுதான், கடவுள் எவ்வளவு பெரியவர், எவ்வளவு சக்தியுள்ளவர் என்பதைப் பற்றியும் அது கற்பிக்கிறதென தெரிந்துகொண்டேன். கடவுளின் மகத்துவத்தைப் பற்றியும் திருப்தியான வாழ்க்கையை அனுபவிக்க நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ரசித்துப் படித்துத் தெரிந்து கொண்டேன். இப்போது நான் இதை முழுசாக வாசித்து விட்டேன்; கடவுளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள எனக்கு ஆசை, திருப்தியான வாழ்க்கையை அனுபவிக்கவும் எனக்கு ஆசை. இந்தச் சின்ன புத்தகத்துக்காக உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.”

திருப்தியான வாழ்க்கைக்கு வழி என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலைப் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து, இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்தில் காணப்படும் பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g03 4/22)

திருப்தியான வாழ்க்கைக்கு வழி என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.