Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள்!

கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள்!

கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள்!

இதைச் செய்ய ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புத்தகம் உங்களுக்கு உதவும். கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுவதற்காகவே தயாரிக்கப்பட்ட புத்தகம் இது. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு பைபிள் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், ஒவ்வொரு அதிகாரத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளே; வாசிப்பதை கிரகிப்பதற்கும் அதன் பேரில் தியானிப்பதற்கும் இந்தக் கேள்விகள் உதவுகின்றன.”

ஆண்டாண்டு காலமாக பைபிளை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவரும் ஒரு பெண் இவ்வாறு சொன்னார்: “இந்த புத்தகம் எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இதை வைத்து பைபிளை கற்றுக்கொடுப்பது ரொம்ப அருமையாக இருக்கிறது.”

இந்தப் புத்தகத்திலுள்ள இதுபோன்ற அதிகாரங்களை வாசித்தால் நீங்களும் ஒருவேளை அவ்வாறே உணருவீர்கள்: “நாம் அனைவரும் எதிர்ப்படும் விவாதம்,” “துன்மார்க்கத்தை கடவுள் அனுமதித்திருப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்,” “உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் வலிமை,” “ஆலோசனையைக் கேட்டு சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்.” ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற 192 பக்க, காகித அட்டையுள்ள புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவலை பெற விரும்பினால் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள். (g04 4/8)

ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.