Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளிடம் எப்படி இன்னும் நெருங்கி வரலாம்

கடவுளிடம் எப்படி இன்னும் நெருங்கி வரலாம்

கடவுளிடம் எப்படி இன்னும் நெருங்கி வரலாம்

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தை அநேகர் சிபாரிசு செய்கிறார்கள். ஒரு வாசகி இவ்வாறு எழுதியுள்ளார்: “அதை இப்போதுதான் படித்து முடித்தேன். இதுவரை எந்தப் புத்தகமும் என்னை இந்தளவுக்குத் தூண்டியதே இல்லை. யெகோவா எவ்வளவு அன்பும் அக்கறையும் தயவும் பாசமும் கொண்ட தகப்பன் என்பதை இந்தப் புத்தகம் நினைப்பூட்டியது. ரொம்ப நன்றி.”

மற்றொரு வாசகி இவ்வாறு விளக்கினார்: “என் பிதாவைப் பற்றி இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள, அதாவது அவருடைய பிரமிக்க வைக்கும் எண்ணங்களையும் நம் அனைவர் மீதும் அவர் காட்டும் மிகுந்த பாசத்தையும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் எனக்கு வாய்ப்பளித்தது. அதை வாசித்தபோது, ஒரு விலையுயர்ந்த, பிரகாசமான, அழகிய வைரக் கல்லை கையில் வைத்து அதன் ஒவ்வொரு பட்டையையும் ஆராய அதை மெல்ல மெல்ல திருப்புவது போல் இருந்தது. ஒவ்வொரு புதிய அதிகாரமும் முந்தைய அதிகாரத்தைவிட அருமையாக இருந்தது.”

மற்றொரு பெண்மணி இவ்வாறு கூறினார்: “யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன். கடைசி இரண்டு பத்திகளை வாசித்தபோது நிறுத்தி நிறுத்தி ஜெபம் செய்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தேன்; பயபக்தியினாலும் அன்பினாலும் அந்தளவு திக்குமுக்காடிப் போனேன். யெகோவாவிடம் நான் வைத்திருக்கும் அன்பும் நன்றியுணர்வும் சொல்ல முடியாதளவுக்கு அதிகரித்துள்ளது!”

320 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தை வாசித்தால் நீங்களும் அவ்வாறே உணர்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம். கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பினால், இந்தப் புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (g04 11/22)

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப் பற்றி எந்தவித நிபந்தனையுமின்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.