Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கஷ்டப்படும் இளைஞிக்கு உதவி

கஷ்டப்படும் இளைஞிக்கு உதவி

கஷ்டப்படும் இளைஞிக்கு உதவி

சிபியா என்ற 13 வயது பள்ளி மாணவி மெக்சிகோவில் வசிக்கிறாள். சக மாணவி ஒருத்தி அடிக்கடி அழுதுகொண்டே பள்ளிக்கு வருவதை அவள் கவனித்தாள். அவளைச் சமாதானப்படுத்த சிபியா முயன்றாள். ஒருநாள் அவள், தன்னுடைய அப்பா குடித்துவிட்டு தன் அம்மாவை அடித்து உதைப்பார் என்று சிபியாவிடம் மனந்திறந்து சொன்னாள்.

அதைப் பற்றி சிபியா இவ்வாறு விவரிக்கிறாள்: “அவள், தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்வதற்குக்கூட முயன்றதாகவும் சொன்னாள். யாருக்குமே தன்மேல் அன்பு இல்லையென்பதாகவும், தான் தனியாக இருப்பதுபோல் உணருவதாகவும் சொன்னாள். இந்தப் உலகத்திலேயே மிகவும் முக்கியமான ஒருவர் அவளை நேசிப்பதாக நான் அவளிடம் கூறினேன். அதன் பிறகு, மனிதர்களுக்கு யெகோவா எப்படிப்பட்ட எதிர்காலத்தை வைத்திருக்கிறார் என்பதையும் விளக்கினேன்.”

பிறகு, சிபியா அந்தப் பெண்ணுக்கு இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைக் கொடுத்தாள்; அதை தினமும் பள்ளி இடைவேளை நேரத்தில் அவளோடு படிக்க ஆரம்பித்தாள். பொதுவாக யாரோடும் ஒட்டாமல் இருந்த அந்தப் பெண் சீக்கிரத்திலேயே எல்லாரோடும் கலகலப்பாக பேசிப் பழக ஆரம்பித்து விட்டாள். பிற்பாடு, சிபியாவுக்கு எழுதிய கடிதத்தில் அவள் இவ்வாறு எழுதியிருந்தாள்: “நீ என்னுடைய தோழியாக இருப்பதற்காகவும், என்னை புரிந்துகொண்டதற்காகவும் ரொம்ப நன்றி. உன்னை மாதிரி ஒரு சகோதரி எனக்கு வேண்டுமென நான் எப்போதுமே ஆசைப்பட்டிருக்கிறேன். யெகோவா என்மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதையும் இப்போது அறிந்திருக்கிறேன்.”

உங்களுக்கு தெரிந்த இளைஞர் ஒருவருக்குகூட இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் புத்தகத்தின் உதவி தேவைப்படலாம். அதிலுள்ள 39 அதிகாரங்களில் சில: “நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?,” “விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?,” மற்றும் “அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?” இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

□இங்கே காட்டப்பட்டுள்ள புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.